கொடநாடு காவலாளி கொலை வழக்கில் 5 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து
கொடநாடு காவலாளி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேர் மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை: கொடநாடு காவலாளி ஓம்பகதூர் கொலை வழக்கு மற்றும் கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேர் மீது விதிக்கப்பட்ட குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
ஜெயலலிதாவுக்கு சொந்தமாக நீலகிரி மாவட்டத்தில் கொடநாடு எஸ்டேட் பங்களா உள்ளது. இங்கு ஜெயலலிதா கோடை காலங்களில் தங்கி ஓய்வெடுப்பது வழக்கம். தற்போது ஜெயலலிதா மறைந்த நிலையில் அதை அங்குள்ள பணியாளர்கள் பராமரித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் 24-ஆம் தேதி அந்த எஸ்டேட்டுக்கு வந்த மர்ம நபர்கள் அத்துமீறி உள்ளே நுழைய முயற்சித்தனர். அப்போது அவர்களை பணியில் இருந்த காவலாளி ஓம்பகதூர் தடுக்க முயற்சித்தார். எனினும் அந்த நபர்கள் அவரை கொலை செய்து உள்ளே சென்று சில ஆவணங்கள், விலை மதிப்புள்ள பொருள்களை திருடிச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து அந்த கொலை மற்றும் கௌள்ளை வழக்கில் உதயம், தீபு, மனோஜ், சதீஷன், பீஜன் ஆகிய 5 பேரை போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து கடந்த ஜூன் 17-ஆ்ம தேதி அந்த 5 பேர் மீது நீலகிரி ஆட்சியர் இன்னோசன்ட் திவ்யா குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து ஆட்சியரிடமும், காவல் துறை கண்காணிப்பாளரிடம் 5 பேரின் உறவினர்களும் மனு அளித்தனர். எனினும் அந்த மனுவுக்கு குறிப்பிட்ட காலத்துக்குள் பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து 5 பேரின் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனு மீதான விசாரணை நீதிபதி ராஜேஷ் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது 5 பேரின் உறவினர்கள் அளித்த மனு மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்காததால் அவர்கள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications