குஜராத்தில் தொடரும் நிலநடுக்கம்! கட்ச் பகுதி ஒரே நாளில் 4 முறை குலுங்கியதால் பீதி!
குஜராத்தில் நிலநடுக்கம் தொடர் கதையாகி வருகிறது. கட்ச் மாவட்டம் ஞாயிறன்று மட்டும் 4 முறை நிலநடுக்கத்தால் அதிர்ந்தது.
பூஜ்: குஜராத் மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 4 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. 2001-ம் ஆண்டு நிலநடுக்கத்தால் பேரழிவை சந்தித்த கட்ச் மாவட்டத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் பீதி ஏற்பட்டது.
குஜராத் மாநிலம் தொடர்ந்து நிலநடுக்க அதிர்வுகளை எதிர்கொண்டு வருகிறது. கடந்த 3 மாதங்களில் 70 முறை நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டிருக்கின்றன.
இவை பெரும்பாலும் 2001-ம் ஆண்டு நிலநடுக்கத்தால் பேரழிவு ஏற்பட்ட கட்ச்/சவுராஷ்டிரா பகுதியிலேயே ஏற்பட்டிருக்கின்றன. இவை அனைத்தும் ரிக்டரில் சுமார் 4 அலகுகளாகவே பதிவாகி இருந்தன.
இது ஞாயிற்றுக்கிழமையும் தொடர்ந்தது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.45 மணிக்கு கட்ச் பகுதியில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் பின்னர் அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கத்தால் கட்ச் பகுதி அதிர்ந்தது.
இதனால் கட்ச் மாவட்டம் நிலநடுக்க பீதியில் உறைந்து போயுள்ளனர்.