தென்காசியில் சேலைக்குள் மறைத்து தங்க வளையல் திருடிய பெண் கைது
தென்காசி
தென்காசி : தென்காசியில் உள்ள நகைக்கடையில் சேலைக்குள் 4 வளையல்களை நைசாக அபேஸ் செய்த திண்டுக்கல்லை சேர்ந்த பெண் கைது செய்யப்பட்டார்.
தென்காசி அம்மன் சன்னதியில் உள்ள ஒரு நகைக்கடையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இரண்டு பெண்கள் நகை எடுப்பதாக கூறினர். ஆனால் நகை எடுப்பது போல் பாவனை செய்து நகை எதுவும் வாங்காமல் கிளம்பிச்சென்றனர்.

அவர்கள் சென்ற பிறகு கடை பணியாளர்கள் நகைகளை சரிபார்த்தபோது ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள 4 வளையல்கள் காணாமல் போனது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து கடையில் இருந்த சிசிடிவி கேமிரா காட்சிகளை பார்த்தபோது அந்த பெண்கள் வளையல்களை பார்த்துக் கொண்டிருந்தபோது 4 தங்கவளையல்களை நைசாக சேலைக்குள் மறைத்து எடுத்துச்சென்ற காட்சிகள் பதிவாகியிருந்தன.
இதுகுறித்து தென்காசி போலீஸில் புகார் செய்தனர். புகாரைத்தொடர்ந்து குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்தனர். இந்நிலையில் அந்த பெண்களின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.
தொலைக்காட்சிகளிலும், இணையங்களிலும் வெளியானதைத்தொடர்ந்து விசாரணையில் திண்டுக்கல் மாவட்டம் ஆவாரம்பட்டியைச் சேர்ந்த மார்க்கண்டன் என்பவரது மனைவி செல்வி (44) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 8 பவுன் மதிப்பிலான நான்கு வளையல்கள் மீட்கப்பட்டன. அவருடன் இருந்த இன்னொரு பெண் மலர் என தெரியவந்தது. அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications