கிணற்றுக்காக போராடும் லட்சுமிபுரம் மக்கள்... மனம் இரங்காத ஓபிஎஸ்- வீடியோ
கிராம மக்களின் பயன்பாட்டுக்கு ஓபிஎஸ் தன் கிணற்றை ஒப்படைக்கவில்லை என கூறி லட்சுமிபுரம் பொதுமக்கள் கையில் விளக்கேந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி: முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்க்கு சொந்தமான கிணற்றை பொதுமக்கள் குடிநீர்த் தேவைக்கு கொடுக்க வேண்டும் என கிராம மக்கள் கையில் விளக்கேந்தி போராட்டம் நடத்தினர்.
முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்ஸுக்கு சொந்தமான கிணறு தேனியை அடுத்துள்ள லட்சுமிபுரத்தில் உள்ளது. அவருடைய கிணறுகளில் அதிக திறன் கொண்ட மோட்டர்களை வைத்து நீர் இறைப்பதால் பொதுமக்களுக்கு குடிக்கக் கூட தண்ணீர் கிடைக்கவில்லை என கடந்த சில மாதங்களாக லட்சுமிபுரம் கிராம மக்கள் ஓபிஎஸ் மீது புகார் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு, கிணற்றை பொதுமக்கள் பயன்பாட்டுக்கே கொடுத்துவிடுகிறேன் என ஓபிஎஸ் வாக்களித்தர். ஆனால், யாருக்கும் தெரியாமல் அந்த கிணறு உள்ள நிலத்தை வேறு ஒருவரின் பெயருக்கு மாற்றி எழுதி கிரையம் செய்துவிட்டார் எனக் மக்கள் புகார் கூறினர். ஆனால்,அந்தப் புகாரையும் ஓபிஎஸ் தரப்பில் மறுத்தனர். மீண்டும் கிணறு பொதுமக்களிடமே ஒப்படைக்கப்பட்டது என தகவல்கள் வெளியாகின.
ஆனால், கிணற்றை இத்தனை போராட்டங்களுக்குப் பிறகும் மக்கள் பயன்பட்டுக்கு ஓபிஎஸ் கொடுக்கவில்லை என்பதால் நேற்று கையில் விளக்கேந்தி முக்கிய தெருக்களில் ஊர்வலமாக வந்து மக்கள் போராடினர். இன்று மாலை மனித சங்கிலிப் போராட்டம் நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும், ஓபிஎஸ் தரப்பு கிணற்றை பொதுமக்களிடம் ஒப்படைக்கும் வரை போராட்டம் தொடரும் என மக்கள் தெரிவித்தனர்.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications