சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல் வழக்கு: 21 பேருக்கு 3 ஆண்டு சிறை- 22 பேர் விடுவிப்பு
சென்னை: சட்டக்கல்லூரி மாணவர்கள் மோதல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 43 பேரில் 21 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 22 பேர் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை சட்டக் கல்லூரி வளாகத்தில் சுவரொட்டி ஒட்டுவது தொடர்பாக மாணவர்கள் மத்தியில் பிரச்சினை ஏற்பட்டது. இதில் ஆயுதங்களுடன் மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

இந்த வன்முறை சம்பவத்தை போலீசார் தடுக்காமல் வேடிக்கை பார்த்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஊடகங்கள் மற்றும் சமூகவலைதளங்களில் வெளியான மாணவர்களின் தாக்குதல் காட்சிகள் நாட்டையே அதிர்ச்சிக்கு ஆளாக்கியது.
இது குறித்து அய்யாதுரை, சித்திரைச் செல்வன் அளித்த புகாரின் பேரில் 43 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பான விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில், விசாரணை முடிவடைந்ததைத் தொடர்ந்து, சென்னை 17-வது கூடுதல் அமர்வு நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட 21 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.
மேலும், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், வழக்குரைஞர் ரஜினிகாந்த் உட்பட 22 பேர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
-
Gold Price Fall: ஈரான் போருக்கு மத்தியில்! தங்கம் விலை குறைய 5 முக்கிய காரணங்கள் என்னென்ன தெரியுமா? -
சென்னையின் மெகா ப்ராஜெக்ட் இதுதான்! மதுரவாயல் டூ துறைமுகம்.. பறக்கும் சாலையில் காத்திருந்த சர்ப்ரைஸ் -
அடுத்த 3 மணி நேரம்.. தேனி டூ குமரி வரை.. 10 மாவட்டங்களில் விட்டு விளாசப் போகுது மழை.. வானிலை அலர்ட் -
சென்னை மாநகர பஸ் பயணிகளுக்கு குட் நியூஸ்! கேஷ்பேக் ஆஃபரில் டிக்கெட்.. உடனே இதை பண்ணுங்க -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை












Click it and Unblock the Notifications