சட்டசபை நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் - ஸ்டாலின்
சென்னை: சட்டசபை நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். தேர்தலில் வெற்றி, தோல்வி ஜனநாயகத்தில் உள்ள நடைமுறை என்றும் ஆளுங்கட்சியின் நிர்வாகத்தை கண்காணிக்கவே மக்கள் திமுகவுக்கு வாக்களித்துள்ளதாகவும் சட்டசபையில் ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த 16ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இதனை அடுத்து நடந்த அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் வருகிற 23ம் தேதி வரை கூட்டத்தொடர் நடத்த முடிவு செய்யப்பட்டது.
17ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் மறைந்த எம்.எல்.ஏ.க்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு, சபை ஒத்திவைக்கப்பட்டது. இதனை அடுத்து, சட்டசபை கூட்டத்தொடர் திங்கட்கிழமை கூடியது. இந்த கூட்டத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்பட்டு, எம்.எல்.ஏ.க்களின் விவாதம் கடந்த இரு தினங்களாக நடைபெற்றது.

மூன்றாம் நாளான இன்று சட்டசபையில் பேசிய எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின், வெளிப்படையான நிர்வாகத்தை ஆளுங்கட்சி தர வேண்டும் என்பதையே மக்கள் விரும்புவதாக கூறினார்.
ஆளுங்கட்சியின் கொள்கை விளக்கமாக ஆளுநர் உரை இருக்க கூடாது என்பது மரபு என்று குறிப்பிட்ட அவர், ஆளுங்கட்சியின் நிர்வாகத்தை கண்காணிக்கவே மக்கள் திமுகவுக்கு வாக்களித்துள்ளதாக தெரிவித்தார். ஆளுங்கட்சி, எதிர்கட்சி இடையே வெற்றி வித்தியாசம் பெரிதாக இல்லையென்று ஸ்டாலின் குறிப்பிட்டார்.
வரலாற்று சிறப்பு மிக்க வகையில் திமுகவிற்கு எதிர்கட்சி அந்தஸ்தை மக்கள் வழங்கியுள்ளதாகவும் தெரிவித்த ஸ்டாலின், வெளிப்படையான நிர்வாகத்தை ஆளுங்கட்சி தர வேண்டும் என்பதே மக்களின் விருப்பம் என கூறினார்.
சட்டசபை நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்த ஸ்டாலின், நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி நேரடி ஒளிபரப்பு செய்ய இயலாது என்று அரசு தெரிவிக்கக் கூடாது என்று குறிப்பிட்டார். விவசாய கடன் தள்ளுபடி, தமிழை ஆட்சி மொழி, நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக மாற்ற முயற்சிப்பதை திமுக வரவேற்பதாகவும் ஸ்டாலின் சட்டசபையில் தெரிவித்தார்.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications