ஜெயலலிதாவின் தேர்தல் பிரச்சார செலவு கட்சிக்கணக்கில்தான் வருமாமே?
சென்னை: விமானம் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் தினசரி சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு ஜெயலலிதா பிரசாரத்திற்கு சென்று வருவது அதிமுக கணக்கில் சேரும் என்று தமிழக தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் தெரிவித்துள்ளார்.
தமிழகம் மற்றும் புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளுக்கும் அதிமுக வேட்பாளர் பட்டியலை கடந்த 24ம் தேதி முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார். அன்றைய தினமே, மார்ச் 3ம் தேதியில் இருந்து ஏப்ரல் 5ம் தேதி வரை 19 தொகுதிகளில் முதல் கட்ட பிரசாரத்துக்கான பட்டியலையும் வெளியிட்டு ஆச்சரியத்தை ஏற்படுத்தினார் ஜெயலலிதா.
சொன்னதோடு மட்டுமல்லாது கடந்த 3ம் தேதியில் இருந்து 6ம் தேதி வரை காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 4 தொகுதிகளுக்கு சென்று ஜெயலலிதா பிரசாரம் செய்துள்ளார்.

விமானம், ஹெலிகாப்டர்
இப்படி பிரசாரத்துக்கு செல்லும்போது, ஜெயலலிதா சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் அல்லது தனி விமானம் மூலம் மட்டுமே செல்கிறார். அங்கிருந்து காரில் முக்கிய இடங்களில் பிரச்சாரம் செய்து விட்டு அன்று மாலை6 மணிக்குள் சென்னைக்கு அதே தனி விமானம் அல்லது ஹெலிகாப்டர் மூலம் திரும்புகிறார்.
இதே நடைமுறையைத்தான் பிரசாரம் முழுவதும் கடைபிடிக்க ஜெயலலிதா திட்டமிட்டுள்ளார்.
வேட்பாளர் தேர்தல் செலவு
ஒரு எம்பி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் அதிகப்பட்சமாக 70 லட்சம் வரை செலவு செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஜெ. பிரச்சார செலவு
அதேசமயம் விமானம் அல்லது ஹெலிகாப்டரில் பிரசாரத்துக்கு செல்லும்போது ஒரு நாள் பயணத்துக்கு பல லட்சம் ரூபாய் செலவாகும். இது வேட்பாளரின் கணக்கில் வருமா? என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
கட்சிக்கணக்கில் வரும்
அதற்கு பதில் சொன்ன பிரவீண்குமார், கட்சி தலைவர்கள் விமானம், ஹெலிகாப்டர் அல்லது கார் மூலம் பிரசாரத்துக்கு செல்வது வேட்பாளர்களின் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது. அந்தந்த கட்சி கணக்கில்தான் சேரும் என்றார்.
கட்சிக்கு கணக்கு இல்லை
ஒரு கட்சி தேர்தலுக்காக இவ்வளவு பணம்தான் செலவு செய்ய வேண்டும் என்று எந்த வரைமுறையும் இல்லை. மற்றபடி அரசு விமானம், ஹெலிகாப்டர், கார்களைத்தான் கட்சி தலைவர்கள் பிரசாரத்துக்கு பயன்படுத்தக் கூடாது.
தனியார் விமானம்
தனியார் விமானம், ஹெலிகாப்டரில் செல்ல அனுமதி உண்டு. கட்சி தலைவர் செல்லும்போது சாலைகளில் அவரது படம் போட்ட பேனர், கட்அவுட் வைக்க தடை விதிக்கப்படும். அரசு ஊழியர் அல்லது கலெக்டர் போன்ற உயர் அதிகாரிகள் முதல்வரை பிரசாரத்துக்காக செல்லும்போது சந்திக்கக் கூடாது.
வேட்புமனு தாக்கலுக்குப் பின்னர்
வேட்புமனு தாக்கல் செய்த பிறகு மேடைகளில் வேட்பாளர்களின் பெயர்களை கட்சி தலைவர்கள் கூறினால், அந்த பொதுக்கூட்ட செலவு முழுவதும் வேட்பாளர் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்று பிரவீண்குமார் கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications