முதல் வெற்றி.. சசிகலா குரூப் கதை முடியப் போகிறது.. மாஃபா பாண்டியராஜன்
சென்னை: தேர்தல் ஆணையம், டிடிவி தினகரனின் பதில் மனுவை ஏற்காமல் நிராகரித்ததன் மூலம் எங்களுக்கு முதல் வெற்றி கிடைத்துள்ளது. விரைவில் அதிமுக எங்களுக்கே வந்து சேரும் என்று முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளரா சசிகலா தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று கூறி தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்துள்ளது ஓ.பி.எஸ். தரப்பு. இதையடுத்து சசிகலா தரப்புக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு சசிகலா பதில் அளிக்காமல் அவரால் திடீர் உப்புமா போல திடீர் துணை பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டவரான டிடிவி தினகரன் பதில் அனுப்பியிருந்தார்.
இதை தூக்கிப் போட்டு விட்டது தேர்தல் ஆணையம். பதில் அனுப்ப தினகரன் யார், எந்த நிர்வாகப் பொறுப்பிலும் இல்லாத அவர் எப்படி பதில் அனுப்ப முடியும். சசிகலாதான் பதில் அனுப்ப முடியும், அனுப்ப வேண்டும் என்று கறாராக கூறி விட்டது. இதுகுறித்து ஓ.பி.எஸ். தரப்பு உற்சாகமடைந்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து மாஃபா பாண்டியராஜன் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

நீதிக்கு வெற்றி
இது நீதிக்கு கிடைத்த முதல் வெற்றி. இறுதி வெற்றிக்கு இது முதல் படி நிலை. டி.டி.வி.தினகரன் துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட பிறகு அடுத்த நாளே அவைத்தலைவர் மதுசூதனன், தினகரனின் மன்னிப்பு கடிதம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றும், அதனால் அவர் இன்னும் அ.தி.மு.க. உறுப்பினராக சேர்த்துக் கொள்ளப்படவில்லை என்றும் தெள்ள தெளிவாக அறிக்கை கொடுத்தார்.

விரைவில் இறுதித் தீர்ப்பு
அதன் அடிப்படையில் தேர்தல் கமிஷன் டி.டி.வி. தினகரன் துணை பொதுச்செயலாளராக கையெழுத்திட்டதை அங்கீகரிக்க இயலாது என்று தெரிவித்துவிட்டது. வெகுவிரைவில் தேர்தல் கமிஷன் இறுதித் தீர்ப்பை வழங்க வேண்டும் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.

விரைவில் பொதுச் செயலாளர் தேர்தல்
பொதுச்செயலாளர் தேர்தலை தேர்தல் கமிஷன் மேற்பார்வையில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்து இருக்கிறோம். அது ஏற்கப்படும் என்ற நம்பிக்கையுடன் நாங்கள் இருக்கிறோம்.

எங்களது கோரிக்கை நிறைவேறும்
தேர்தல் நடைபெறும் காலம் வரை அனைத்து முடிவுகளையும் அவைத்தலைவர் மதுசூதனன், பொருளாளர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் இணைந்து எடுக்க அதிகாரம் அளிக்க வேண்டும் என்றும் தேர்தல் கமிஷனுக்கு கோரிக்கை விடுத்து இருக்கிறோம். அதுவும் நிறைவேறும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறோம். என்றார் பாண்டியராஜன்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications