சென்னை முகப்பேரில் துண்டு துண்டாக வெட்டி உடலுறுப்புகளை வீசியவர் கைது... பரபர பின்னணி
சென்னை முகப்பேரில் துண்டு துண்டாக வெட்டி உடல் உறுப்புகளை வீசிய இறைச்சிக் கடை ஊழியர் கைது செய்யப்பட்டார்.
சென்னை: சென்னை முகப்பேரில் துண்டு துண்டாக வெட்டி உடல்உறுப்புகளை கால்வாயில் வீசிய வழக்கில் கொலையாளி போலீஸார் கைது செய்தனர். கொலையுண்டவரின் அடையாளமும் தெரிந்தது.
முகப்பேர் மேற்கு பகுதி வழியாக செல்லும் மழைநீர் கால்வாயில் இருந்து கடுமையான தூர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் நகராட்சி அதிகாரிகளிடம்
கடந்த 27-ஆம் தேதி புகார் அளித்துள்ளனர்.
இதனையடுத்து அங்கு சென்ற துப்புரவு பணியாளர்கள், அங்கு கிடந்த கோணிப்பையை இழுத்துச் சென்று குப்பைத் தொட்டியில் போட முயன்றுள்ளனர். அப்போது கோணிப்பையில் கட்டப்பட்டிருந்த கயிறு அறுந்து விழுந்த போது, பையிலிருந்து துண்டு துண்டாக வெட்டப்பட்ட ஆணின் உடல் பாகங்கள் கீழே விழுந்தது.

பிரேத பரிசோதனை
இதனால் அதிர்ச்சியடைந்த துப்புரவு பணியாளர்கள், உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் உடல் பாகங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸ் தீவிர விசாரணை
உடல் பாகங்களில் தலை இல்லாத காரணத்தினால் அடையாளம் காணுவதில் சிக்கல் ஏற்பட்டது. உடலின் தலை பாகத்தை நொளம்பூர் போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் கொலையுண்டவர் டைலர் பாபு என தெரியவந்தது.

முகமது ரசூல் கைது
இதைத் தொடர்ந்து இறைச்சி கடை ஊழியர் முகமது ரசூலை கைது போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது பாபுவை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.

கொலையை மறைக்க சதி
மது குடித்துக் கொண்டிருந்தபோது கொடுக்கல் வாங்கல் தகராறு ஏற்பட்டதால் ஆத்திரத்தில் கொலை செய்ததாகவும் அதனை மறைக்கவே உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி பல்வேறு பகுதிகளில் வீசியதாக வாக்குமூலம் அளித்தார்.
-
கடலூரில் முகம் சிதைத்த நிலையில் கிடந்த இளம்பெண் சடலம்.. கொலையாளி யார்? போலீஸ் தீவிரம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications