ஆன்மிகத்தில் ஈடுபாடுள்ள ஆட்சி திராவிட மாடல் ஆட்சி! அறநெறியுடன் திருக்கோயில் பணிகள் -எ.வ.வேலு பேச்சு!
கள்ளக்குறிச்சி: ஆன்மிகத்தில் ஈடுபாடுள்ள ஆட்சி தான் திராவிட மாடல் ஆட்சி என பேசியிருக்கிறார் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு.
மேலும், கிராமப்புற கோயில்களுக்கு இந்துசமய அறநிலையத்துறை மூலம் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருவதாகவும் அமைச்சர் வேலு பேசியுள்ளார்.
கள்ளக்குறிச்சியில் ஆவின் புதிய நிர்வாகிகள் பொறுபேற்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அமைச்சர் எ.வ.வேலு
கள்ளக்குறிச்சி மாவட்ட பொறுப்பு அமைச்சராக உள்ள எ.வ.வேலு அங்கு நடைபெற்ற ஆவின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், கிராமப்புற கோயில்களுக்கு அரசு அளித்து வரும் முக்கியத்துவம் பற்றி பட்டியலிட்டார். மேலும், இந்து சமய அறநிலையத்துறை மூலம் அமைச்சர் சேகர்பாபு ஆற்றி வரும் பணிகளை பெருமை பொங்க பேசினார் எ.வ.வேலு. அதனைத் தொடர்ந்து பேசிய அவர், அறநெறியுடன் திருக்கோயில் பணிகள் கவனிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

ஆன்மிகம் பற்றி பேச்சு
மேலும், ஆன்மிகத்தில் ஈடுபாடுள்ள ஆட்சி தான் திராவிட மாடல் ஆட்சி என்றும் இந்துசமய அறநிலையத்துறைக்கு முதல்வர் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் எனவும் பேசினார். இதுமட்டுமல்லாமல் சேகர்பாபுவை அந்த துறைக்கு அமைச்சராக்கி இருப்பதன் மூலம் திருக்கோயில் பணிகள் செம்மையாக நடைபெற்று வருவதாக பெருமிதம் தெரிவித்தார். ஆவின் நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் ஆன்மிகம் பற்றி பேசி கவனம் ஈர்த்துள்ளார் இவர்.

திராவிட மாடல்
திராவிட மாடல் ஆட்சி என்றால் அதற்கும் ஆன்மிகத்திற்கும் தொடர்பு இல்லை என நினைத்துவிடாதீர் என்பதை சூசகமாக தெரிவித்துள்ளார் அமைச்சர் எ.வ.வேலு. இதனிடையே இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அண்மையில் கூட தமிழகம் முழுவதும் 2,000 திருக்கோயில்களில் ஒரு கால பூஜை நடத்த ரூ.40 கோடி வைப்புத் தொகைக்கான காசோலையை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உற்சாக வரவேற்பு
முன்னதாக நிகழ்ச்சியில் பங்கேற்க அமைச்சர் எ.வ.வேலுவுக்கு கள்ளக்குறிச்சி திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். குறிப்பாக உட்கட்சித் தேர்தல் மூலம் பதவிக்கு வந்துள்ள புதிய நிர்வாகிகள் அமைச்சர் வேலுவுக்கு பொன்னாடை அணிவிக்க போட்டி போட்டு வரிசையில் நின்றனர்.
-
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications