அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி... ஆன்லைனில் ஆர்டர் செய்தால் வீடு தேடி மீன் வரும்!
ஆன்லைன் மூலம் மீன் ஆர்டர் செய்தால் அரைமணி நேரத்துக்குள் டெலிவரி செய்யப்படும் வகையில் ஆன்லைன் விற்பனையகத்தை,சென்னை பட்டினம்பக்கத்தில் அமைச்சர் ஜெயக்குமார் திறந்துவைத்தார்.
சென்னை: சென்னையில் ஆன்லைன் மூலம் மீன் விற்பனை நடைபெறும் என்றும் அரை மணி நேரத்துக்குள் ஆர்டர் செய்பவருக்கு மீன் டெலிவரி செய்யப்படும் எனவும் நிதி மற்றும் மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் ஆன்லைன் மூலம் மீன் விறபனையகத்தை பட்டினம்பாக்கத்தில் நிதி மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் திறந்துவைத்தார். அவருடன் சென்னை மாவட்ட ஆட்சியர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய அமைச்சர் ஜெயக்குமார், மீன்கள் இதயநோய்கள் வராமல் தடுக்கக் கூடிய சக்தி கொண்டவை. மீன், ஆரோக்கியமான உணவு. இதை ஆன்லைன் மூலம் விற்பனை செய்யும் முயற்சி இன்றிலிருந்து ஆரம்பிக்கப்படுகிறது.
ஆன்லைன் மூலம் மீன் ஆர்டர் செய்பவர்கள் www.meengal.com என்ற இணைய முகவரி மூலம் தேவைப்படும் மீன்களை ஆர்டர் செய்யலாம். ஆர்டர் செய்யப்பட்ட அரை மணியிலிருந்து ஒரு மணி நேரத்துக்குள் மீன்கள் டெலிவரி செய்யப்படும். குறைந்தபட்சம் ரூ.500க்கு ஆர்டர் செய்ய வேண்டும். டெலிவரி கட்டணமாக ரூபாய் 35 வசூலிக்கப்படும் என்று கூறினார்.
ஆன்லைனில் ஆர்டர் செய்ய இயலாதவர்கள் 044- 24956896 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்தார். மேலும், மீன் ஆர்டர் செய்பவர்கள், மீன் அங்காடி இருக்கும் இடத்தைச்சுற்றி 5 கிலோமீட்டர் சுற்றளவுக்குள் இருக்க வேண்டும். சென்னையில் மட்டுமில்லாது பிற மாவட்டங்களுக்கும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று கூறினார்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி













Click it and Unblock the Notifications