ஹாசினி வழக்கில் நிச்சயம் மேல்நடவடிக்கை.. அமைச்சர் ஜெயக்குமார் உறுதி!
ஹாசினி கொலைக்குற்றவாளி தஷ்வந்த் மீது அரசு மேல்நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் ஜெயக்குமார் உறுதியளித்துள்ளார்.
சென்னை : குழந்தை ஹாசினி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளி மீது நிச்சயம் மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை போரூரை அடுத்த மதனந்தபுரத்தில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த சம்பவம் இப்போது நினைத்தாலும் நெஞ்சை பதறவைக்கிறது. 7 வயது குழந்தை ஹாசினியை பாலியல் வன்கொடுமை செய்து அதே குடியிருப்பில் வசித்த இளைஞன் கொலை செய்தான்.

ஒரு பிஞ்சுக் குழந்தையை கருக்குவதற்கு அவனுக்கு எப்படித் தான் மனம் வந்ததோ என்று புலம்பாதவர்களே இல்லை எனலாம். ஆனால் நேற்று முன் தினம் குற்றவாளி தஷ்வந்த் மீதான குண்டர் சட்டம் ரத்தானதால், அவனுக்கு எளிதில் ஜாமினும் கிடைத்துவிட்டது.
7 மாதங்களில் குற்றவாளி தஷ்வந்திற்கு ஜாமின் கிடைத்துள்ளது அனைவர் மத்தியிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார், ஹாசினியை கொலை செய்த குற்றவாளி தஷ்வந்த் மீது அரசு நிச்சயம் மேல்நடவடிக்கை எடுக்கும்.
குழந்தைகளுக்கு எதிரான வன்முறையில் யார் ஈடுபட்டாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். குற்றவாளி தஷ்வந்திற்கு அளிக்கப்படும் தண்டனை மற்றவர்களுக்குப் பாடமாக அமையும் என்றும் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
-
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications