தேர்தலை புறக்கணித்த திருத்தணி மிட்டகண்டிகை கிராம மக்கள்
திருத்தணி: தங்களது கிராமத்துக்கு அடிப்படை வசதிகளை செய்து தராததைக் கண்டித்து திருத்தணி அருகே மிட்டகண்டிகை கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர்.
சட்டசபை தேர்தலின் போது பல்வேறு தரப்பினர் தேர்தலை புறக்கணிப்போம் என அறிவிப்பது வழக்கம். பின்னர் அதிகாரிகள் பேச்சு நடத்தி அந்த தரப்பை சமாதானப்படுத்துவர்.

ஆனால் திருத்தணி அருகே மிட்டகண்டிகை கிராம மக்கள் தாங்கள் அறிவித்தபடியே தேர்தலை புறக்கணிப்பு செய்துள்ளனர். மிட்டகண்டிகை மக்கள் தங்களது கிராமத்துக்கு 20 ஆண்டுகாலமாக அடிப்படை வசதி செய்து தரப்படவில்லை. ஆகையால் வாக்குப் பதிவை புறக்கணிக்கிறோம் என அறிவித்துள்ளனர்.
இன்று காலை முதல் அந்த கிராமத்தில் ஒரு வாக்குகூட பதிவாகவில்லை. இதனைத் தொடர்ந்து அரசு அதிகாரிகள் அக்கிராமத்துக்கு சென்று தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு கிராமும் புறக்கணிப்பு
இதேபோல் திருத்தணி அருகே மங்காபுரம் காலனி மக்களும் தேர்தலை புறக்கணித்தனர். அவர்கள் தங்களுக்கு தனிவாக்குச்சாவடி அமைக்கக் கோரி 714 வாக்காளர்கள் தேர்தலைப் புறக்கணித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications