ஆளுநர் சட்டசபையை கூட்டினால் திமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் - ஸ்டாலின்
சட்டசபையை ஆளுநர் கூட்ட வேண்டும், அதன்பிறகு திமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை: சட்டசபையை கூட்டும் அதிகாரம் ஆளுநருக்கு மட்டுமே உள்ளது. அவர் பேரவையை கூட்டினால் திமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
Recommended Video

தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 21 பேர் ஆளுநரை சந்தித்து எடப்பாடி பழனிச்சாமி மீது தங்களுக்கு நம்பிக்கையில்லை என கடிதம் அளித்துவிட்டு சொகுசு விடுதியில் தங்கியுள்ளனர்.
இந்த கடிதத்தை அடிப்படையாக வைத்து, ஏற்கனவே 2 முறை திமுக சார்பில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் மனுக்கள் வழங்கப்பட்டன. சட்டசபையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்பது கோரிக்கை. ஒருவாரம் கெடு அளித்தார் எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின்.

திமுக வழக்கு
ஆளுநர் இன்னும் இதில் முடிவை எடுக்கவில்லை. இந்த நேரத்தில், எடப்பாடி பழனிச்சாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட கோரி ஹைகோர்ட்டில் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது.

நிரூபிக்கட்டும்
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக செயல்தலைவர் ஸ்டாலின்,ஆளுநரிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் வழக்கு தொடர்ந்ததாக கூறினார். ஜனநாயக ரீதியாக நீதிமன்றத்தை நாடியுள்ளோம்.

அதிகாரம் ஆளுநருக்கே
சட்டசபையை கூட்டும் அதிகாரம் ஆளுநருக்கே உள்ளது. ஆளுநரை பேரவையை கூட்டினால் திமுக நிச்சயமாக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வரும்.

கொல்லைப்புற ஆட்சி
கருணாநிதியின் கொள்கை, திமுகவின் கொள்கை எல்லாமே ஒன்றுதான். நாங்கள் ஒருபோதும் கொள்ளைப்புறமாக ஆட்சிக்கு வர விரும்பமாட்டோம். அதில் என்றைக்குமே உறுதியாக இருக்கிறோம்.

பெரும்பான்மையை நிரூபிக்கட்டும்
முதலில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையை நிரூபிக்கட்டும். அதன்பிறகு என்னை விமர்சனம் செய்யட்டும் என்று கூறிய ஸ்டாலின், தினகரன் ஒரு விளம்பர பிரியர் என்று கூறினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications