எங்க ஊருக்குத்தான் எய்ம்ஸ்.. இல்லாவிட்டால் ராஜினாமா.. ரணகளம் கிளப்பும் மதுரை அதிமுக எம்எல்ஏக்கள்!
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்காவிட்டால் ராஜினாமா செய்வோம் என்று அதிமுக எம்எல்ஏக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை : மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைத்தே தீர வேண்டும் இல்லாவிடில், மதுரையை சேர்ந்த அனைத்து எம்எல்ஏக்களும் ராஜினாமா செய்வோம் என்று திருப்பரங்குன்றம் எம்எல்ஏ போஸ் தெரிவித்துள்ளார்.
தென்மாவட்ட மக்களின் மருத்துவ சேவையை பூர்த்தி செய்ய மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதனால் தென் மாவட்ட மக்களின் தேவையை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்துவதாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று தெரிவித்திருந்தார். மேலும் மதுரையில் இந்த எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட வேண்டும் என்றும், இந்த கோரிக்கையில் மத்திய அரசுக்க அழுத்தம் கொடுக்கும வகையில் தனது பதவியை ராஜினாமா செய்யக் கூடத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

இந்நிலையில் திருப்பரங்குன்றம் எம்எல்ஏ ஏ.கே.போஸ் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட்டே ஆக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும் இந்த கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக அதிமுகவின் மதுரை மாவட்ட எம்எல்ஏக்கள் 8 பேர் மற்றும் மாற்றுக் கட்சியை சேர்ந்த 2 எம்எல்ஏக்கள் என அனைவருமே தங்களது பதவியை ராஜினாமா செய்யத் தயங்க மாட்டோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எய்ம்ஸ் மருத்துவமனையை தஞ்சாவூரில் அமைக்க மத்திய அரசுக்கு மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் முதல்வர் எடப்பாடியின் முடிவிற்கு எதிராக தினகரன் ஆதரவு அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மற்றும் எம்எல்ஏ போஸ் மதுரையில் தான் எய்ம்ஸ் மருத்துமனை அமைய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications