விவசாயிகள் குறித்துக் கவலைப்படாத வெங்கையா.. இளையராஜா விவகாரத்தில் தலையிடுவது ஏன்?
எஸ்பிபிக்கு இளையராஜா காப்பிரைட் நோட்டீஸ் அனுப்பிய விவகாரம் இப்போது அடுத்த கட்டத்துக்குப் போய்விட்டது. அதாவது அரசியல்வாதிகள் கைக்கு!
மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு இதுகுறித்துப் பேச ஆரம்பித்துள்ளார். "இளையராஜாவின் பாடல்களை எஸ்பிபி பாடுவதில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது எனக்கு ஆச்சர்யத்தை அளிக்கிறது. இந்த விவகாரம் நல்ல விதமாக சரி செய்யப்பட வேண்டும்!" என்று அவர் கூறியுள்ளார்.

இது உடனடி சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. எஸ்பிபியின் பூர்வீகம் தெலுங்கு என்பதால், இதில் வெங்கய்யா நாயுடு தலையிட ஆரம்பித்திருக்கிறார் என்று பேச ஆரம்பித்திருக்கிறார்கள் (ஆனா கெரகம்... கூடப் பிறந்த கங்கை அமரனே இளையராஜாவுக்கு பள்ளம் பறித்துக் கொண்டிருக்கிறார்!).
இது இரு பெரும் கலைஞர்களுக்கிடையிலான சண்டையல்ல. வழக்கமான ஒரு நடைமுறையை வேண்டுமென்றே எஸ்பிபி ஊதிப் பெரிதாக்கியதன் விளைவு. அவர் இளையராஜாவை போனில் அழைத்து விஷயத்தைச் சொல்லியிருந்தால் விஷயம் முடிந்திருக்கக் கூடும். ராஜாவின் நிகழ்ச்சியில் பாட ரூ 20 லட்சம் கேட்டிருக்கிறார் எஸ்பிபி. அது தரப்படாததால் அவர் நிகழ்ச்சிக்குப் போகவில்லை. பண விஷயத்தில் எஸ்பிபியே இவ்வளவு கறாராக இருக்கும்போது, நாம் மட்டும் ஏன் விட வேண்டும் என தன் உரிமையைக் கேட்டிருக்கிறார் இசைஞானி. இவ்வளவுதான் விஷயம்.
நிச்சயமாக அடுத்த ஏதோ ஒரு நிகழ்ச்சியில் இந்த இசைக் கலைஞர்கள் இருவரும் கட்டித் தழுவிக் கொண்டாலும் ஆச்சர்யமில்லை. மத்திய அமைச்சர் ஒருவர் தலையிட்டு பஞ்சாயத்து பண்ணும் அளவுக்கான விவகாரம் இல்லை இது.
'டெல்லியில் தமிழக விவசாயிகள், வெறும் கோவணத்துடன் பகலில் எரிக்கும் வெயிலிலும், இரவில் கொட்டும் பனியிலும் ரோட்டில் படுத்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பிரச்சினையைக் காது கொடுத்துக் கேட்க துப்பில்லாத அமைச்சர்கள், சினிமாக்காரர்களின் பிரச்சினை என்றதும் வந்துட்டாங்க சொம்பைத் தூக்கிக்கிட்டு பஞ்சாயத்து பண்ண... ' என மக்கள் கோபத்தில் வெடிக்க ஆரம்பித்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications