காஸ்ட்ரோ மண்ணை விட்டு மறைந்தாலும் மனதை விட்டு மறையாதவர்- கம்யூனிஸ்ட் தலைவர்கள் அஞ்சலி #FidelCastro
காஸ்ட்ரோ மண்ணை விட்டு மறைந்தாலும் புரட்சியாளர்களின் மனதை விட்டு மறையாதவர் என்று கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை: கியூபா முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ காலமானார். பிடல் காஸ்ட்ரோவின் மறைவுக்கு இந்திய அரசியல் தலைவர்களும், தமிழக தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்தியாவின் நண்பர் காஸ்ட்ரோ என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் கூறியுள்ளார். காஸ்ட்ரோ அனைத்து புரட்சியாளர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்தவர் என்று கூறியுள்ளார். மரணத்தை வென்ற மாவீரன் அவர் இன்று அவர் மரணத்திருக்கலாம். ஆனால் புரட்சியாளர்களின் நெஞ்சங்களில் இருந்து அவர் மரணமடையவில்லை அவருக்கு எனது வீர வணக்கம் என்று கூறினார்.

இதேபோல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், பிடல் காஸ்ட்ரோவிற்கு வீர வணக்கம் செலுத்தியுள்ளார். காஸ்ட்ரோ ஒரு மாபெரும் போராளி மட்டுமல்ல மிகச்சிறந்த ஆட்சியாளர், மக்களின் மனம் கவர்ந்த புரட்சி நாயகன் என்று புகழாரம் சூட்டியுள்ளார் ஜி. ராமகிருஷ்ணன். உடல் நலம் குன்றிய உடன் பதவியை விட்டு விலகி, ஆட்சியாளருக்கு ஆலோசனை வழங்கினார். இன்றைய ஆட்சியாளர்களுக்கு சிறந்த முன்னுதாரனமாக திகழ்ந்தவர் காஸ்ட்ரோ என்று புகழாரம் சூட்டியுள்ளார் ஜி. ராமகிருஷ்ணன்.
காஸ்ட்ரோ சிறந்த எழுத்தாளர், பேச்சாளர், வழக்கறிஞர், போராளி மட்டுமல்ல, சிறந்த ஆட்சியாளர். மிகப்பெரிய தலைவர். அவரது மறைவு கியூபா நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் இழப்புதான், மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வீர வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன் என்று ஜி. ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
பிடல் காஸ்ட்ரோ மிகச்சிறந்த போராளி மட்டுமல்ல மனித நேயம் கொண்ட நல்ல தலைவர். மக்களின் மனங்களை புரிந்து செயல்படுபவர் என்று கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு கூறியுள்ளார். இந்தியாவின் மிகச்சிறந்த நண்பராக இறுதி வரை இருந்தவர். அவரது மறைவுக்கு கியூபாவுக்கு மட்டுமல்ல இந்தியாவிற்கும்தான் இழப்பு என்று நல்லக்கண்ணு தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications