15 கிமீ போய் சரக்கு வாங்கி குடிக்கிற நிலைமை வந்துருச்சே.. புலம்பும் 'கன்னிவாடி' குடிகாரர்கள்!
திண்டுக்கல் அருகே டாஸ்மாக் கடை மூடப்பட்டதால் குடிமகன்கள் 15 கிலோ மீட்டர் தூரம் சென்று சரக்கு வாங்கி குடிப்பதாக வேதனை தெரிவித்துள்ளனர்.
திண்டுக்கல்: உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து கன்னிவாடி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை மூடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி குடிமகன்கள் 15 கிலோ மீட்டர் தூரம் சென்று சரக்கு வாங்கி குடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை கடந்த மாதம் 31ஆம் தேதியுடன் மூடுமாறு சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் 3000க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.
இப்படி மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை ஊருக்குள் வைக்க அரசு முயன்று வருகிறது. இதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மதுக்கடைக்கு எதிர்ப்பு
இதனால் பல்வேறு கிராமங்களிலும் சாலைமறியல், உண்ணாவிரதம் உள்ளட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் புதிய டாஸ்மாக் கடைகளை திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அலைமோதும் கூட்டம்
இதனால் திறந்திருக்கும் ஒரு சில கடைகளில்தான் குடிமகன்கள் சரக்கு வாங்கி குடித்து வருகின்றனர். இதன் காரணமாக டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதி வருகிறது.

15 கி.மீ செல்லும் குடிகாரர்கள்
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடியில் உள்ள மதுக்கடை உச்சநீதிமன்ற தீர்ப்பால் அகற்றப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி குடிமகன்கள் 15 கி.மீட்டர் தூரத்திலுள்ள திண்டுக்கல், சின்னாளபட்டி, வக்கம்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் போய் தான் சரக்கு வாங்கி வருகிறார்கள்.

கூடுதல் விலைக்கு விற்பனை
ஒரு குடிமகன் சரக்கு வாங்க போகும்போது மற்ற குடிமகன்களுக்கும் சேர்த்தே மொத்தமாக வாங்கி வந்து இப்பகுதிகளில் உள்ள புளியமரத்தடியிலும், தென்னந்தோப்பு அடியிலும் ஒன்றுகூடி உட்கார்ந்து குடித்துவிட்டு வருகின்றனர். டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதால் திறந்திருக்கும் ஒரு சில கடைகளிலும் சரக்கு கூடுதல் விலை வைத்து விற்கப்படுவதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

குடிகாரார்கள் புலம்பல்
திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடியில்தான் குடிகார்களுக்கான சங்கம் உள்ளது. குடிகாரர்களுக்கு என தனி சங்கம் வைத்தும் அங்கு மதுக்கடை இல்லாதது அப்பகுதி குடிமகன்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கன்னவாடி பகுதியில் மதுக்கடைகளை அமைக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை!












Click it and Unblock the Notifications