ஹைட்ரோ கார்பன் திட்டம் சிதற வேண்டும்... கோயிலில் சிதறு தேங்காய் உடைத்த நெடுவாசல் மக்கள்
புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் அறிவிக்கப்பட்ட ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட கோரி 100 கிராம மக்கள் இன்று மாலை பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட கோரி 100 கிராம மக்கள் இன்று பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
விவசாயத்துக்கு சாவு மணி அடித்துவிட்டு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தங்கள் ஊரில் செயல்படுத்தக் கூடாது என்று வலியுறுத்தி அந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் 95 நாள்களாக போராடி வருகின்றனர். ஆனால் மத்திய அரடோ செவிமடுத்து கேட்கவில்லை.

இன்று வரை முடியாமல் உள்ள இந்த போராட்டத்தை பெரிய அளவுக்கு முன்னெடுத்து செல்ல மக்கள் முடிவு செய்தனர். அதன்படி ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி மாலை புதுக்கோட்டையில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரினர்.
ஆனால் போலீஸாரின் அனுமதி மறுக்கப்பட்டது. அதனால் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அனுமதி பெற்று தடிகொண்ட அய்யனார் திடலில் ஆர்ப்பாட்டம் இன்று மாலை நடைபெறவுள்ளது. அதில் 100 கிராம மக்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதற்காக அப்பகுதி மக்கள் 50 வேன்கள், 20-க்கும் மேற்பட்ட கார்கள், 100-க்கும் மேற்பட்ட சைக்கிளிலும் ஆர்ப்பாட்டம் நடத்தும் இடத்துக்கு புறப்பட்டு விட்டனர்.
இதனால் நெடுவாசலில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. நாடியம்மன் கோயில் திடலில் திரண்ட நெடுவாசல் மக்கள் எங்களை வாழ விடு.. ஹைட்ரோ கார்பன் சைத்தான் வேண்டாம்.. விவசாயம் வேண்டும் என்று முழக்கமிட்ட விவசாயிகள்.. சிறப்பு வழிபாடு நடத்தி சிதறு தேங்காய் உடைத்து.. இதே போல ஹைட்ரோ கார்பன் திட்டமும் இன்றோடு சிதற வேண்டும் என்று வழிபாடு நடத்திவிட்டு வாகனங்களில் புறப்பட்டனர்.
பேராவூரணி தொகுதியில் இருந்து சுமார் 200 வாகனங்களில் சென்றவர்கள் கைகாட்டியில் நிறுத்தி முழக்கமிட்டனர். போராட்டம் நடைபெறவுள்ள இடத்தில் திருச்சி டிஐஜி, எஸ்பி, 3 ஏடிஎஸ்பி க்கள், 800 போலீஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications