நெல்லை அருகே தமிழக எல்லையில் கொட்டப்படும் கேரள மருந்து கழிவுகள்... பீதியில் மக்கள்
நெல்லை: நெல்லை அருகே தமிழக எல்லைப் பகுதியில் மருந்து கழிவுகள் கொட்டப் பட்டிருப்பதால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
நெல்லை அருகே உள்ள ரெட்டியார்பட்டியில் குடியிருப்புகள் அருகே உள்ள மலைப்பகுதியில் பெர்டோனியல் டயாலிசிஸ் சொல்யூஸன் என்ற லேபிலுடன் 2 லிட்டர் கொள்ளவு கொண்ட மருந்து பாக்கெட்டுகள் குவியல் குவியலாக கொட்டப்பட்டிருந்தன.

இந்த பாக்கெட்டுகளுடன் மருந்து ஏற்றும் டியூப்புகளும் கிடந்தன. இதை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இப்பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் பயன்படுத்தப்பட்ட மருந்துகளை குவியலாக கொட்டி விட்டு செல்வது அடிக்கடி நடக்கிறது.
தற்போது கொட்டப்படடுள்ள இடம் அருகே சில மாதங்களுக்கு முன்பு இதை போல் மருந்து பாக்கெட்டுகள் குவியல் குவியலாக புதைத்து கிடந்தன. பாதுகாப்பாற்ற நிலையில் கொட்டப்பட்டுள்ள இந்த மருந்து பாக்கெட்டுகளை சுகாதாரத்துறையினர் உடனடியாக அகற்ற வேண்டும். இதில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இது குறிதது மருத்துவத் துறை வட்டாரத்தில் விசாரித்த போது, "இந்த திரவ மருந்து சிறுநீரக பாதிப்பு அல்லது வயிற்று பாதிப்பு உள்ளவர்களுக்கு கொடுக்கப்படும். டயாலிசிஸ் (ரத்த சுத்திகரிப்பு) சிகிச்சை செய்வதற்கு மாற்றாக இந்த சிகிச்சை மேற்கொள்ளப்படும். வயிற்றில் சிறு துளையிட்டு இதில் உள்ள மருந்தை செலுத்தி சவவூடு பரவல் முறையில் உப்புநீரை சுத்தப்படுத்தி மற்றொறு துளை வழியாக வெளியேற்றப்படும்.
பின்னர் இந்த பாக்கெட்டுகளை மருத்துவ துறையின் அறிவுரையின்படி பாதுகாப்பான முறையில் இதற்கென செயல்படும் நிறுவனத்திடம ஓப்படைத்து அழிக்க வேண்டும். எந்த காரணத்தை கொண்டும் இதை திறந்த வெளியில் கொட்டக்கூடாது. தற்போது வீசப்பட்டுள்ள பாககெட்டுகள் மேலும் தீ்ங்கை விளைவிக்கும்' எனத் தெரிவித்துள்ளனர்.
மருந்து பாக்கெட்டுகள் கொட்டப்பட்டுள்ள இடம் தமிழக - கேரள எல்லையை ஓட்டி உள்ளதால், இது கேரளாவில் இருந்து கொண்டு வந்து கொட்டப்பட்ட மருந்துக் கழிவுகளா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications