நிறைய தூது வருது.. என்னை சிந்திக்கவிட மாட்டீங்களா... பொறுமை...: கூட்டணி பற்றி விஜயகாந்த்
சென்னை: லோக்சபா தேர்தலில் கூட்டணி தொடர்பாக இன்னமும் தாம் எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
சென்னையில் தேமுதிக தலைமையகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் விஜயகாந்த் பேசியதாவது:
சிலர் நினைக்கின்றனர் எங்களுக்குள் ஏதாவது பிரச்சினை வந்து விடாதா? பிரிந்து விட மாட்டார்களா? என்று எண்ணுகிறார்கள். அது நடக்காது. என்னையும், என் தொண்டர்களையும் யாராலும் பிரிக்க முடியாது.

பொதுத்தேர்தலில் காலி..
இலவசங்களை கொடுக்கிறீங்க. வேலையை கொடுக்கிறீர்களா? இன்றைக்கு விவசாயிகள் தமிழகத்தில் பெரிய துன்பத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள். பிரதமர் ஆவது எல்லாம் அப்புறம் இருக்கட்டும், முதலில் தமிழக மக்களை கவனியுங்கள். தமிழக மக்களை சீராட்டுங்கள். இடைத்தேர்தலில் இலவசத்தை கொடுத்தால் ஓட்டுப்போடுவார்கள். ஆனால் பொது தேர்தலில் காலி செய்து விடுவார்கள்.

கோர்வையாக பேச தெரியாதே..
கோர்வையாக பேச தெரியாது என்று சொல்கிறார்கள். கோர்வையாக பேசி மக்களை நான் ஏமாற்ற விரும்பவில்லை. மனம் என்ன சொல்கிறதோ? அதை எனக்குள் தணிக்கை செய்து பேசுகிறேன். இதில் என்ன தவறு?

காங், பாஜக மீது சாடல்
நான் காங்கிரசையும் குறை சொல்வேன். பாரதிய ஜனதாவையும் குறை சொல்வேன். தனியாக நின்றாலும் குறை சொல்வேன்.

கூட்டணி?
இதுவரைக்கும் யாருடன் கூட்டணி என்று சொல்லியிருக்கிறேனா? யாருடன் கூட்டணி, கூட்டணி என்று கேட்கிறார்கள். என் மனதில் உள்ளது உங்களுக்கு தெரியுமா? நீங்கள் என்ன வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளுங்கள். நான் பொறுமையாக இருக்கிறேன்.

திருமா சந்திப்பு
திருமாவளவன் சந்தித்தார். உடனே கருத்து கேட்றீர்கள். என்னை சிந்திக்க விட மாட்டீர்களா? நாட்கள் இருக்கிறது. எனது கட்சி மாநாடு இருக்கிறது. அதன் பிறகு சொல்கிறேன்.

நிறைய தூது
நிறைய தூது வருகிறது. எல்லோரும் என்னிடம் வருவார்கள். அதை பற்றியெல்லாம் சொல்ல முடியுமா?
இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications