ஐடி ரெய்டுக்கும் பாஜகவுக்கும் தொடர்பு இல்லை… தமிழிசை சொல்லுவதை நம்புங்க ப்ளிஸ்
சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று வருமானவரித் துறை சோதனை நடத்தி வருகிறது. இதற்கும் பாஜகவிற்கும் சம்பந்தமும் இல்லை என்று தமிழிசை சொல்லி இருக்கிறார்.
சென்னை: இன்னும் நான்கு நாட்களில் ஆர்.கே. இடைத்தேர்தல் நடைபெற உள்ள சூழ்நிலையில் தமிழகத்தின் அமைச்சர் ஒருவரின் வீட்டில் ஐடி ரெய்டு நடப்பது இதுவே முதல்முறை.
இன்று அதிகாலை முதல் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடுகள், அலுவலகங்கள், எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் கீதாலட்சுமி, சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் வீடு என சுமார் 35 இடங்களில் இன்று வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஆர். கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா புகார் எழுந்ததுதான் ரெய்டுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. என்றாலும் இதற்கு பின்னணியில் பாஜக பெரிய அளவில் அரசியல் லாபம் பார்க்கிறது என்று அதிமுக அம்மா கட்சியினர் குற்றச்சாட்டுக்களை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், கருப்புப் பண மீட்பு நடவடிக்கைதான் இன்று நடைபெற்ற வருமானவரித் துறை சோதனை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறியுள்ளார். இதில் எந்த அரசியலும் இல்லை என்றும் அடித்துக் கூறுகிறார். இதில் எந்த அரசியலும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.