இன்று மேலும் ஒரு விவசாயி தற்கொலை.. இதுவரை 35 பேர்... வாயே திறக்காமல் உள்ள தமிழக அரசு!
தமிழகத்தில் மேலும் ஒரு விவசாயி இன்று தற்கொ லை செய்து கொண்டார். இவரையும் சேர்த்து இதுவரை 35 விவசாயிகள் இறந்துள்ளனர். ஆனால் தமிழக அரசு எதுவும் பேசாமல் அமைதி காத்து வருகிறது.
விருத்தாச்சலம்: தமிழகத்தில் இன்று மேலும் ஒரு விவசாயி பயிரிழப்பு காரணமாக மனம் உடைந்து தற்கொலை செய்துள்ளார். இவரையும் சேர்த்து இந்த ஆண்டு இதுவரை 35 விவசாயிகள் உயிரை நீத்துள்ளனர்.
தமிழக விவசாயிகளுக்கு இந்த ஆண்டு மிகப் பெரிய கொடுமையான ஆண்டாக மாறி விட்டது. வறட்சியாலும், பாசனத்திற்குத் தேவையான தண்ணீர் கிடைக்காததாலும், மழை பொய்த்ததாலும் விவசாயிகள் பெரும் தவிப்புக்குள்ளாகி விட்டனர்.

கர்நாடக அரசு காவிரியில் போதிய தண்ணீர் திறந்து விடாத காரணத்தால் காவிரி டெல்டா பகுதி வறண்டு போய் விட்டது. வட கிழக்குப் பருவ மழையும் பொய்த்துப் போய் விட்டது. இடையில் வந்த புயலாலும் யாருக்கும் எந்த பிரயோஜனமும் இல்லை.
இப்படி அடுத்தடுத்த அடியால் விவசாயிகள் தற்கொலை செய்து வருகின்றனர். இதுவரை 34 விவசாயிகள் தற்கொலை செய்துள்ள நிலையில் தற்போது விருத்தாச்சலத்தில் ஒரு விவசாயி தற்கொலை செய்துள்ளார். வி்ருத்தாச்சலம் அருகே உள்ளது மணவாள நல்லூர். இக்கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி மான்துரை. இவர் தனது நிலத்தில் போட்டிருந்த பயிர்கள் போதிய நீர் இல்லாமல் கருகிப் போனதைப் பார்த்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தார்.
இவரையும் சேர்த்து தமிழகத்தில் இதுவரை 35 விவசாயிகள் தற்கொலை முடிவை எடுத்துள்ளனர். இதுகுறித்து தமிழக அரசு இதுவரை வாயே திறக்காமல் உள்ளது. தமிழக அரசும் சரி, ஆளும் கட்சியும் சரி இதுவரை இதைப் பற்றிக் கவலையே படாமல், கருத்தே தெரிவிக்காமல் மெளனமாக உள்ளது.
இதுவரை தஞ்சாவூர் மாவட்டத்தில் 5 பேரும், திருவாரூரில் 5 பேரும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 12 பேரும், தூத்துக்குடி மாவட்டத்தில் 1, நெல்லை மாவட்டத்தில் 1, திருவள்ளூர் மாவட்டத்தில் 1, ஈரோடு மாவட்டத்தில் 2 பேரும் உயிரிழந்துள்ளனர். இந்த வரிசையில் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலமும் தற்போது இணைந்துள்ளது.
இதுவரை தற்கொலை செய்த எந்த ஒரு விவசாயியின் குடும்பத்தையும் அமைச்சர்களோ, அதிகாரிகளோ சந்திக்கவில்லை. அவர்களுக்கு இழப்பீடோ அல்லது நிவாரணமோ அறிவிக்கவில்லை. ஒரு ஆறுதல் கூட தெரிவிக்கவில்லை என்பது அதிர்ச்சிகரமானதாகும்.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications