'தட்ஸ்தமிழ்' பேஸ்புக் பதிவின் பலன்: மாயமான மனநோயாளி குடும்பத்தோடு சேர்த்து வைப்பு!
சென்னை: மனநலம் பாதிக்கப்பட்டு இடம் தெரியாமல், ஊரைவிட்டு சுமார் 200 கிலோமீட்டர் தொலைவில் சுற்றித் திரிந்த நபர், 'ஒன்இந்தியா தமிழ்' பேஸ்புக் பதிவால் பத்திரமாக அவரது உறவினர்களுடன் சேர்க்கப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகேயுள்ள உடன்குடி நகர பஸ் நிலையத்தில், மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு நபர் சுற்றிதிரிவதாக கிடைத்த தகவலை, புகைப்படத்துடன் 'ஒன்இந்தியா தமிழ்' இணையதளம் சார்பில், இரு தினங்கள் முன்பு அதன் பேஸ்புக் பக்கத்தில் ஷேர் செய்திருந்தோம்.

உடன்குடி நகர ஆம்ஆத்மி கட்சி நிர்வாகி குணசீலன் வேலன் என்பவரின் தொலைபேசி இணைப்பையும் அதில் கொடுத்திருந்தோம். 'ஒன்இந்தியா தமிழ்' பேஸ்புக்கை 7 லட்சத்துக்கும் அதிகமானோர் ஃபாலோ செய்து வருகின்றனர். அதில் பலரும் வெளிநாடுகளை சேர்ந்தவர்களாகவும் உள்ளனர்.

இந்நிலையில், நமது சிங்கப்பூர்வாசகர் ஒருவர், தொடர்புகொண்டு, மனநலம் பாதிக்கப்பட்ட நபர் தனது உறவினர் என்று தெரிவித்தார். மனநலம் பாதிக்கப்பட்டவர் பெயர் கண்ணன், மதுரை, வண்டியூர் பகுதியை சேர்ந்த நெசவு தொழிலாளி என்றும் தெரியவந்தது. இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சமீபகாலமாகத்தான் இந்தநிலைக்கு ஆளாகியுள்ளார் என்றும் அந்த உறவுக்காரர் கூறினார்.

அதன்பிறகு, தகவல், கண்ணனின் மனைவி, லட்சுமி மற்றும் உறவுக்காரர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்ததும், உறவினர்கள்தானா என்பதற்கான ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டார். களத்தில் இருந்து இந்த ஏற்பாடுகளை குணசீலன்வேலன் மேற்கொண்டுள்ளார்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications