கனியாமூர் பள்ளி கலவர வழக்கு.. கோர்ட்டில் குவிந்த 500க்கும் மேற்பட்டோர்.. நீதிபதி போட்ட உத்தரவு!
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி கலவர வழக்கில் 500க்கும் மேற்பட்டோர் இன்று கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில், வழக்கு ஜூலை 19 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 13 ஆம் தேதி அன்று கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் பகுதியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவி தனியார் பள்ளி விடுதியின் மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது. பள்ளி மாணவி உயிரிழந்ததை தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில் போலீஸ் வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டது. இந்தக் கலவரம் தொடர்பாக, சிறப்பு புலனாய்வு குழு போலீசார் விசாரணை நடத்தினர். பள்ளி கலவரம் தொடர்பாக பள்ளி மாணவி ஸ்ரீமதியின் தாய் செல்வி, தாய்மாமன் செந்தில்முருகுன் மற்றும் 53 சிறார்கள் உட்பட 916 பேர் மீது வழக்குப் பதிவு செய்து, 500க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.
இந்த வழக்கை சிறப்புப் புலனாய்வுக் குழு தற்போது வரை விசாரித்து வரும் நிலையில், பள்ளி சூறையாடல் வழக்கில் 615 பேர் ஒரே நேரத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. இந்நிலையில் இன்று கனியாமூர் தனியார் பள்ளி கலவர வழக்கில் 500க்கும் மேற்பட்டோர் விசாரணைக்காக மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகினர். இதனால் நீதிமன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
கனியாமூர் பள்ளி கலவர வழக்கில் இன்று 500க்கும் மேற்பட்டவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட நீதிமன்றத்திற்கு வருகை தந்தனர். முதற்கட்டமாக 20 பேர் நீதிபதி முன்பு
ஆஜர் படுத்தப்பட்டனர். வழக்கு விசாரணை ஜூலை 19 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications