முகப் பிளவு பிரச்சினைக்குள்ளான பாகிஸ்தான் குழந்தைக்குச் சென்னையில் கிடைத்த புதுமுகம்!

கண், கண்ணைச் சுற்றி உள்ள முக எலும்பு சரிவர இணையாமல் போனால், முகப்பிளவுகள் ஏற்படும். பொதுவாக இந்த குறைபாடானது ரேடியேஷன் பாதிப்பு மற்றும் உறவுகளுக்குள் திருமணம் செய்துகொள்வதால் உருவாகும்.
இதில், அரிய குறைபாடான இருபக்க முகப்பிளவு மற்றும் இரு கண்களிலும் பாதிப்பு, பாகிஸ்தான் நாட்டில், உறவுகளுக்குள் திருமணம் செய்து கொண்ட அர்ஷத் அலி-ரசியா என்ற பெற்றோருக்கு பிறந்த நோமன் என்ற குழந்தைக்கு பிறவியிலேயே ஏற்பட்டு இருந்தது.
நோமனின் தந்தை அர்ஷத் அலி ஒரு விவசாயி என்பதால், நோமனின் குறைபாட்டை சரி செய்ய போதுமான பண வசதி இல்லை.
மேலும், பாகிஸ்தான் டாக்டர்களாலும் இந்த குறைபாட்டை சரி செய்ய முடியாது என கைவிட்ட நிலையில், தென் ஆசிய பசிபிக் பிராந்திய பல் மருத்துவ சம்மேளனத்தின் தலைவர் மற்றும் பாகிஸ்தான் பல் மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் ஆஸிப் ஆரின், மனிதாபிமான உதவியோடு, தற்போது 18 மாதமான நோமனுக்காக, சென்னையை சேர்ந்த முகச்சீரமைப்பு மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் எஸ்.எம்.பாலாஜியிடம் உதவி கேட்டு பரிந்துரை செய்தார்.

இதைத் தொடர்ந்து, நோமனை அழைத்துக்கொண்டு அவனது பெற்றோர் பாகிஸ்தான் அரசின் அனுமதியோடு, சென்னைக்கு வந்து டாக்டர் எஸ்.எம்.பாலாஜி மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது சிறுவன் நோமன் இருபக்க முகப்பிளவுடன், வலது கண் பார்வை 40 சதவீதத்துடன் இடது கண் முற்றிலும் பார்வை இழந்து காணப்பட்டான்.
டாக்டர் எஸ்.எம்.பாலாஜி தம் குழுவினருடன் 4 மணி நேரம் ஆபரேஷன் செய்து இடது கண்ணிற்கு செயற்கை கண் பொருத்தியும், வலது கண் பார்வை மற்றும் கண் இமைகளை சரிசெய்தும், எப்போதும் வழிந்து கொண்டிருந்த கண்ணீரை, கண்ணிற்கும், மூக்கிற்கும் இடையே இருந்த குழாயை அகற்றிவிட்டு, சிலிகான் டியூப் பொருத்தி அக்குறைபாட்டையும் சரி செய்தார்.
மேலும் இருபக்க உதடு பிளவை சீரமைத்து கீழ் உதடு போல் மேல் உதட்டையும், சீரமைத்து வாய் பகுதியை உருவாக்கி, அச்சிறுவன் உணவு உட்கொள்ள மற்றும் அவனின் முகத்தோற்றத்தை சரிசெய்தார். ஆபரேஷனுக்கு பின் நோமனின் முழுமையான தோற்றத்தை கண்டு, அவனது பெற்றோர் மனமகிழ்ச்சி அடைந்தனர்.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications