Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விருதுநகர் போறீங்களா.. அங்கே மார்க்கெட்டில் பாமாயில் விலை என்ன தெரியுமா.. பதற வைத்த பச்சை பட்டாணி

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: பாமாயில் விலை அளவுக்கு அதிகமாக உயர்ந்துள்ள நிலையில், அதுகுறித்து வியாபாரிகள் வருத்தம் தெரிவிக்கிறார்கள்.. என்ன காரணம்?
வரத்துக்குறைவு காரணமாக சென்னையில் அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை 20 சதவீதம் வரை அதிகரித்துவிட்டது.. அதிலும், துவரம் பருப்பின் விலை கிலோ 40 ரூபாய் வரை உயர்ந்துள்ளது மிகப்பெரிய அதிர்ச்சியை தந்து வருகிறது.

ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் உணவுத் தானியங்களின் விளைச்சல் குறைந்துள்ளதால்தான், தமிழ்நாட்டுக்கு வரும் மளிகைப் பொருட்களின் வரத்தில், பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக காரணம் சொல்கிறார்கள்.

 Palm Oil Rate has hiked in Virudhunagar Market and Do you what are the main Reason

கோயம்பேடு: எனினும், கோயம்பேடு உணவு தானிய மொத்த விற்பனை வளாகத்தில் அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்களின் விலை திடீரென அதிகரித்தது.. து.பருப்பை தவிர, பாசிப் பருப்பு போன்ற பருப்பு வகைகள் 20 முதல் 40 ரூபாய் வரை உயர்ந்துவிட்டன.

இந்நிலையில் விருதுநகர் சந்தையில் வாரந்தோறும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைப் பட்டியல் வெளியிடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த வாரமும் லிஸ்ட் வெளியாகியுள்ளது.

கடலை எண்ணெய்: அதன்படி, "ரூ.3,000க்கு விற்ற 15 கிலோ கடலை எண்ணெய் ரூ.100 அதிகரித்து ரூ.3,100க்கும், ரூ. 1,390க்கு விற்ற 15 கிலோ பாமாயில் ரூ. 70 அதிகரித்து ரூ.1,460க்கும், மல்லி நாடு உருட்டு 40 கிலோவிற்கு ரூ. 300 அதிகரித்து ரூ. 2,800, முதல் ரூ.3,100க்கும் விற்கப்படுகிறது.. 15 கிலோ நல்லெண்ணெய் ரூ.6,435, சர்க்கரை 50 கிலோ ரூ.1,980, மைதா 90 கிலோ பை ரூ.4380, பொரிகடலை 55 கிலோ ரூ.4250, கொண்டைக்கடலை 100 கிலோ ரூ. 5850க்கும் விற்கப்படுகிறது.

100 கிலோ துவரம் புதுசு நாடு வகை ரூ.12,500, நயம் புதுசு லயன் ரகம் ரூ.14,000க்கு விற்கப்படுகிறது. நாட்டு உளுந்து 100 கிலோ ரூ.8400, பாசிப்பயறு நாடு ரூ.8200, பாசிப்பயறு இந்தியா லயன் மீடியம் ரூ.12,000 விற்கப்படுகிறது.. 100 கிலோ மசூர் பருப்பு உடைத்தது ரூ.10,100க்கும், உருட்டு உளுந்தம் பருப்பு நாடு ரூ. 11,800, பர்மா வகை ரூ.12000, தொலி உளுந்தம் பருப்பு நாடு ரூ. 10,200, பாசிப் பருப்பு ரூ.10,000க்கும் விற்கப்படுகிறது.

மல்லி வத்தல்: மாவட்டம் முழுவதும் நாட்டு ரக வத்தல் வரத்து இல்லை. குண்டூர் வத்தல் 100 கிலோ ரூ. 24,000 முதல் ரூ.26,000க்கும், முண்டு வத்தல் ரூ.15,000 முதல் ரூ.18,000 வரையும் விற்கப்படுகிறது. மல்லி நாடு உருட்டு 40 கிலோவிற்கு ரூ. 300 அதிகரித்து ரூ. 2,800, முதல் ரூ.3,100க்கும், லயன் வகை ரூ. 3,200 முதல் ரூ.3,500க்கும் விற்கப்படுகிறது.

மைதா முதல் ரகம் ரூ.4,380 ஆகவும், 2-ம் ரகம் ரூ.3,500 ஆகவும், ஆட்டா 25 கிலோ ரூ.1,150 ஆகவும், ரவை 30 கிலோ ரூ.1,470 ஆகவும், கோதுமை தவிடு 50 கிலோ ரூ.1,390 ஆகவும், பட்டாணி 100 கிலோ ரூ.5,600 முதல் ரூ.6,200 வரையிலும், பட்டாணி பருப்பு ரூ.6 ஆயிரம் ஆகவும்காபி பிளாண்டேஷன் பிபி ரகம் 50 கிலோவிற்கு ரூ.20,100 ஆகவும், A ரகம் ரூ.20,600 ஆகவும், C ரகம் ரூ.17,300 ஆகவும், ரோபஸ்டா பிபி ரகம் ரூ.10,700 ஆகவும், பிளாக் பிரவுன் ரகம் ரூ.9600 ஆகவும் விற்பனையானது.

வியாபாரிகள்: இந்த விலை உயர்வு குறித்து வியாபாரிகள் சொல்லும்போது, பண்டிகை காலங்களில் மட்டுமே, பலகார வகைகளுக்கு அடிக்கடி விலையை ஏற்றி, இறக்கம் செய்ய முடியாது.. அப்படி நாங்கள் விலையை மாற்றி மாற்றி நிர்ணயம் செய்தால் பொதுமக்கள் தாங்கள் வாங்கி சாப்பிடும் பலகாரங்களின் அளவை குறைத்துவிடுவார்கள். இதனால் வியாபாரம் பெரிதும் பாதிக்கப்படும் நிலை உருவாகும் என்று வருத்தம் தெரிவிக்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+