அரசியல் அவதாரம் எடுக்கிறது அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் - ஆம் ஆத்மியுடன் பேச முடிவு
இடிந்தகரை: கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டத்தை அரசியல் தளத்துக்குக் கொண்டு போவோம் என்று அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் அறிவித்துள்ளது. மேலும் இதுதொடர்பாக ஆம் ஆத்மி கட்சியுடன் தங்களது இயக்கத்தின் நிபந்தனைகள் குறித்துப் பேசவும் அது தீர்மானித்துள்ளது.
இதுதொடர்பாக மக்கள் இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கை...
தென்தமிழக மக்களும் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கமும் சேர்ந்து நடத்திவரும் கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டத்தை அரசியல் தளத்துக்கு நகர்த்துவது என்று இடிந்தகரையில் இன்று (நேற்று) நடந்த சமுதாயத் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட கடலோரம் மற்றும் உள்ளூர் சமுதாயத் தலைவர்கள் கூட்டம் இடிந்தகரையில் பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது.
சுமார் 200க்கும் அதிகமான தலைவர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களையும் தங்கள் ஊர் மக்களின் கருத்துக்களையும் தெரிவித்தனர். அந்தக் கருத்துக்களின் அடிப்படையில் கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டத்தை அரசியல் தளத்துக்கு நகர்த்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

சமுதாயத் தலைவர்களின் ஒப்புதலின் அடிப்படையில் ஆம் ஆத்மி கட்சியுடன் எமது நிபந்தனைகள் குறித்துப் பேச்சு நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களிலுள்ள பல்வேறு ஊர்களிலிருந்து சேவியர் வாஸ், அரிமாவளவன், அகஸ்டின், ஜோசப், பெர்னார்டு, சுபாஷ் பெர்னாண்டோ, கணேசன், ராஜலிங்கம், ல்க்ஷ்மி மணிவண்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். போராட்டக் குழுவைச் சார்ந்த உதயகுமார், புஷ்பராயன், மை.பா. நன்மாறன், ஜெயக்குமார், கிளாரட், முகிலன் போன்றோரும் கலந்து கொண்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் இந்த முடிவு, புதிய அரசியல் சக்தியாக அது மாறப் போவதன் முதல் கட்டமாக கருதப்படுகிறது. ஆம் ஆத்மியுடன் இணைந்து இந்த அமைப்பு வரும் நாடாளுமன்றத் தேர்தலி்ல தென் மாவட்டங்களில், கடலோர மாவட்டங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications