பாமக பந்த் எதிரொலி: பல்வேறு மாவட்டங்களில் அரசு பேருந்து கண்ணாடிகள் உடைப்பு - கல்வீச்சு
பந்த் காரணமாக அரசு பேருந்துகள் கண்ணாடிகள் அடித்து உடைக்கப்பட்டன.
Recommended Video

வேலூர்: மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக நடத்தி வரும் முழுஅடைப்பு போராட்டம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அரசு பேருந்துகளின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டதால் பதட்டம் நிலவி வருகிறது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாமக சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. முழு அடைப்பு காரணமாக பல மாவட்டங்களில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.

இந்த முழு அடைப்புக்கு புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் தனது முழு ஆதரவினை தெரிவித்துள்ளது. இதனால் புதுச்சேரியில் பேருந்துகள் எதுவும் இயக்கப்படவில்லை. அதேபோல கடைகளும் பெரும்பாலும் அடைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் முழு அடைப்பு காரணமாக தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இந்நிலையில் குடியாத்தத்தில் தனியார் பேருந்து மீது மர்மநபர் கல்வீசியுள்ளார். கண்ணாடி உடைப்பால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.
தருமபுரி மாவட்டம் பொன்னகரம் பகுதியில் 4 பேருந்துகளின் மீது கற்கள் வீசப்பட்டன. இதில் பேருந்துகளின் கண்ணாடி சுக்குநூறாக உடைந்தன. இதனால் அந்தயே களேபரமாக காட்சியளித்தன.
அதேபோல, திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் அரசுப்பேருந்து இயக்கப்படுவதை கண்டித்து மர்மநபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். மர்மநபர்கள் கல்வீசி தாக்கியதில் அரசுப்பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. இதனால் வந்தவாசியில் குறைந்த அளவே பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கடலூர் மாவட்டத்தில் பெரும்பாலான தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை.
குடியாத்தத்தில் தனியார் பேருந்து மீது மர்மநபர் கல்வீசியுள்ளார். கண்ணாடி உடைப்பால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூரில் முழு அடைப்பு முழுமையாக உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள் ஓடவில்லை. கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அரசு பேருந்துகள் மட்டுமே குறைந்த அளவில் ஓடிக் கொண்டுள்ளன. சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. அதேபோல, மதுராந்தகத்திலும் 100 சதவீதம் கடையடைப்பு நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் முழு அடைப்பு காரணமாக தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு!












Click it and Unblock the Notifications