சாத்தூர் பேருந்து துப்பாக்கிச்சூடு: ரஃபீக்கிற்கு 4 நாள் போலீஸ் காவல்- துப்பாக்கி கண்டெடுப்பு
விருதுநகர்: சாத்தூரில் அரசுப் பேருந்தில் நடந்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேட்டுப்பட்டியில் உள்ள ஒரு ஓடையில் துப்பாக்கியை போலீசார் கண்டெடுத்துள்ளனர். மேலும் கொலையாளி அணிந்திருந்த உடையையும் இருக்கன்குடி என்ற இடத்தில் போலீசார் கண்டெடுத்தனர்.
கடந்த 12ம் தேதி நாகர்கோவிலில் இருந்து கோயம்புத்தூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து சாத்தூரில் நின்ற போது, அந்தப் பேருந்தில் பயணம் செய்த கருப்பசாமி என்பவர், அவர் அருகே அமர்ந்து பயணம் செய்தவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

கடந்த ஜூலை மாதம் 2ம் தேதியன்று அப்துல்லா என்பவர் கொல்லப்பட்ட சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டு கருப்பசாமியின் சகோதரர்கள் இருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். எனவே அப்துல்லாவின் கொலைக்கு பழிவாங்கும் வகையில் இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்திலும் காவல்துறை விசாரணை மேற்கொண்டனர்.
இந்தக் கொலை தொடர்பாக 9 பேரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில், கடந்த 13ம் தேதியன்று மதுரை 3-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், முகமது ரஃபீக் என்பவர் சரணடைந்தார். இவரை 17ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில், ரஃபீக்கின் நீதிமன்ற காவல் முடிந்ததையடுத்து, நீதிமன்றத்தில் நேற்று சாத்தூர் 2வது நடுவர் நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர் படுத்தப்பட்டார்.
ரஃபீக்கை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றனத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. சாத்தூர் 2வது நடுவர் நீதிமன்ற நீதிபதி ரபீக்கை 4 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்துள்ளார்.
சாத்தூரில் அரசுப் பேருந்தில் நடந்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேட்டுப்பட்டியில் உள்ள ஒரு ஓடையில் துப்பாக்கியை போலீசார் கண்டெடுத்துள்ளனர். மேலும் கொலையாளி அணிந்திருந்த உடையையும் இருக்கன்குடி என்ற இடத்தில் போலீசார் கண்டெடுத்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications