ஹைட்ரோ கார்பனை எதிர்த்து புதுக்கோட்டையில் போராட்டம் நடத்தலாம்.. அனுமதி வழங்கியது ஹைகோர்ட் மதுரை கிளை
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து புதுக்கோட்டையில் போராட்டம் நடத்த தமிழக அரசு மறுப்பு தெரிவித்த நிலையில், உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கியுள்ளது.
மதுரை: நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என்று கோரி புதுக்கோட்டையில் நாளை போராட்டம் நடத்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி அளித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளது.
இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசல் கிராம மக்களோடு 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இணைந்து 93 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அனுமதி மறுப்பு
இந்நிலையில், ஹைட்ரோ கார்பனை எதிர்த்து புதுக்கோட்டையில் நாளை போராட்டம் நடத்த நெடுவாசல் போராட்டக் குழுவினர் போலீசாரிடம் அனுமதி கேட்டனர். இதற்கு அனுமதி கொடுக்க போலீசார் மறுப்பு தெரிவித்தனர்.

எதிர்த்து வழக்கு
இதனைத் தொடர்ந்து, நெடுவாசல் போராட்டக்குழுவைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

தேவையற்ற போராட்டம்
அப்போது, போலீசார் தரப்பில் சின்னப்பா பூங்கா மிகச் சிறியதாக இருந்ததால் போராட்டம் நடத்த அனுமதி வழங்கவில்லை என்று பதில் கூறப்பட்டது. மேலும், இந்தப் போராட்டம் தேவையற்றது என்றும் கூறப்பட்டது.

ஹைகோர்ட் அனுமதி
இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிமன்றம், சின்னப்பா பூங்காவிற்கு பதில் தடிகொண்ட அய்யனார் திடலில் போராட்டம் நடத்த அனுமதி வழங்கியுள்ளது. நாளை மாலை 2 மணி முதல் 5 மணி வரை போராட்டம் நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications