முதலில் தேமுதிக, அடுத்த தமாகா.. இப்போது தமுப... தாறுமாறாக சிதையும் ம.ந.கூ.!
சென்னை: சட்டசபை தேர்தலின் போது திமுக- அதிமுகவுக்கு மாற்றாக அறிவித்துக் கொண்ட மக்கள் நலக் கூட்டணி தற்போது கட்டெறும்பாக தேய்ந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இடதுசாரிகள் ஆகிய கட்சிகள் இணைந்து மக்கள் நலக் கூட்டியக்கமாக உதயமானது. பின்னர் இது தேர்தலுக்கான மக்கள் நலக் கூட்டணியானது.
சட்டசபை தேர்தலில் தேமுதிக, தமாகா, தமிழர் முன்னேற்றப் படை கட்சி என பல கட்சிகளும் மக்கள் நலக் கூட்டணியில் இணைந்தன. தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்கப் போகிறோம் என்றெல்லாம் அறிவித்த கையோடு யாருக்கு என்ன அமைச்சர் பதவி என்றெல்லாம் கூட ஒதுக்கீடு செய்தார்கள்.

அதிர்ச்சி தந்த தேர்தல் முடிவுகள்
ஆனால் தேர்தல் முடிவுகள் வந்த போது அனைத்தும் டமாலாகிப் போனது... ஆம் மக்கள் நலக் கூட்டணியும் அதை நம்பி வந்த கட்சிகளும் டெபாசிட்டை பறிகொடுத்து பரிதவித்தன. இதனால் ஒவ்வொரு கட்சியாக மக்கள் நலக் கூட்டணியில் இருந்து விலகின.

அடுத்தடுத்து விலகல்...
தேமுதிக, தமாகா என அடுத்தடுத்து மக்கள் நலக் கூட்டணிக்கு பெரும் கும்பிடு போட்டுவிட்டு எஸ்கேப் ஆகினர். தற்போது மீண்டும் திமுக கூட்டணிக்கே திரும்பிவிடலாமா என ஆழ்ந்த யோசனையில் இருக்கிறது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.

தனித்துவிடப்படும் மதிமுக
இதே பாதையில் இடதுசாரிகளும் பயணிக்கலாம் எனவும் மதிமுக மட்டுமே மக்கள் நலக் கூட்டணியில் தனித்த ஒரு கட்சியாக இருக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மக்கள் நலக் கூட்டணிக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக தமிழர் முன்னேற்றப் படையின் தலைவர் வீரலட்சுமியும் அறிவித்திருக்கிறார்.

வீரலட்சுமியும் எஸ்கேப்
இத்தனைக்கும் வீரலட்சுமிக்கு மதிமுகவின் பம்பரம் சின்னத்தில் போட்டியிடவும் வாய்ப்பு தரப்பட்டது. ஆனால் அவர் மண்ணைத்தான் கவ்வினர். தற்போது மக்கள் நலக் கூட்டணி மீது விமர்சனங்களையும் வைக்கத் தொடங்கியிருக்கிறார்.
சட்டசபை தேர்தலுக்காக மையம் கொண்ட மக்கள் நலக் கூட்டணி உள்ளாட்சித் தேர்தலுக்குள் காணாமலேயே போய்விடும் என்றே தெரிகிறது.
-
தமிழக அரசியலுக்கு திருமாவளவன் திரும்பியது ஏன்? உளவுத்துறை எடுத்த நோட்ஸ்.. கசிந்த சீக்ரெட்? -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை












Click it and Unblock the Notifications