தமிழக மக்களை ஆழமாக நேசிப்பவர் கருணாநிதி.. ராகுல் காந்தி புகழாரம் !
சென்னை: பல்லாயிரக்கணக்கான தமிழக மக்களை ஆழமாக நேசிப்பவர் திமுக தலைவர் கருணாநிதி என்று ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற விழாவில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி கூறினார்.
திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி சட்டப்பேரவை உறுப்பினராகி 60 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அதன் வைர விழாவும், அவரது 94வது பிறந்த நாள் விழாவும் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், திமுக தலைவர் கருணாநிதி பல்லாண்டு காலம் வாழ வேண்டும். பல லட்சம் தமிழ் மக்களால் நேசிக்கப்படுபவர் கருணாநிதி.

மம்தா பானர்ஜி, நிதீஷ்குமார், சரத்பவார் ஆகியோரின் பேச்சுக்கள் அவர்கள் மாநிலத்தின் எண்ணத்தை பிரதிபலிக்கும். அதுவே அந்த மாநில மக்களின் குரலாக உள்ளது. அனைத்து மாநில குரல்களும் ஒன்றாக பேசும்போதுதான் இந்தியா வலிமையாகும்.
அதுபோல் கருணாநிதி பேசும்போது தமிழர்கள் எண்ணத்தை பிரதிபலிக்கும். அதுவே தமிழக மக்களின் குரலாக ஒலிக்கிறது. மக்களை தொடர்ந்து நேசிப்பதால் தான் கருணாநிதி போட்டியிட்ட அனைத்து தேர்தலிலும் வெல்ல காரணமாக உள்ளது. மக்கள் கருணாநிதி மீதும், கருணாநிதி மக்கள் மீதும் அன்பு வைத்துள்ளனர். இதுதான் கருணாநிதியின் பலத்திற்கு காரணம். அவரது சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது.












Click it and Unblock the Notifications