மழை வெள்ளத்தில் மூழ்கிய நெற்பயிர்கள்... கவலையில் மூழ்கிய காவிரி டெல்டா விவசாயிகள்
வடகிழக்கு பருவமழையால் காவிரி டெல்டாவில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
தஞ்சாவூர்: தமிழகத்தில் கடந்த ஆண்டை விட இந்தாண்டு வடகிழக்கு பருவமழை தீவிரம் காட்டி வருகிறது. காவிரி டெல்டா மாவட்டங்களில் மழை விட்டு விட்டு வெளுத்து வாங்கியதால் அனைத்து பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் நேரடி நெல் விதைப்பாக 2 லட்சம் ஏக்கர், நடவு பணியாக ஒரு லட்சம் ஏக்கர் என மொத்தம் 3 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி நடைபெற்றுள்ளது.
தொடர் மழையினால் கொரடாச்சேரி, குடவாசல், நன்னிலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பயிர்களை மழைநீர் சூழ்ந்துள்ளன. இதனால், சுமார் ஒரு லட்சம் ஏக்கரில் சம்பா பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.

பல்வேறு தெருக்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் பொது மக்கள் பரிதவிப்பில் உள்ளனர். திருத்துரைபூண்டி பகுதியிலும் தெருக்களில் தண்ணீர் புகுந்ததால் பாதுகாப்பு கருதி பேரிடர் மீட்பு குழுவினர் அங்குள்ளவர்களை மீட்டு வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதுமட்டுமின்றி, திருவிடைமருதூர், பூதலூர், தஞ்சை உள்ளிட்ட பகுதிகளில் 600 ஏக்கர் சம்பா வயல்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதன்காரணமாக, கல்லணையிலிருந்து பாசன ஆறுகளில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
மழை தொடரும் என்பதால் பல்வேறு முன்னேச்சரிக்கை நடவடிக்கை வேகமாக நடந்து வருகிறது.
கனமழையால் காவிரி டெல்டா மாவட்டங்களில் 4 லட்சம் ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன. தண்ணீர் வடியாவிட்டால் பயிர்கள் அழுகிவிடுமோ என்று விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications