நீட் தேர்வுக்கு விலக்கு கோரி முதல்வர் உண்ணாவிரதம் இருக்க வேண்டும்: ஓய்வுபெற்ற நீதிபதி அரிபரந்தாமன்
நீட் தேர்வுக்கு விலக்கு கோரி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என்று முன்னாள் நீதிபதி அரி பரந்தாமன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை : நீட் தேர்விலிருந்து விலக்கு பெற சட்டத்தில் இடம் உண்டு. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உண்ணாவிரதம் இருந்து தனது எதிர்ப்பை காட்ட வேண்டும் என்று முன்னாள் நீதிபதி அரி பரந்தாமன் கோரிக்கை விடுத்துள்ளார்.
நீட் தேர்வு மூலம் மருத்துவ சேர்க்கை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதால் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் கிடைத்தும் மருத்துவம் பயில முடியாத விரக்தியில் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனிதா தற்கொலை செய்துக் கொண்டார்.

இதனால் கிட்டதட்ட ஒரு வார காலத்துக்கு தமிழகத்தில் மத்திய- மாநில அரசுகளை கண்டித்து மாணவர்கள், இளைஞர்கள், வழக்குரைஞர்கள் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் சென்னையில் இயக்குநர் பா.ரஞ்சித் ஏற்பாடு செய்த கல்வி முன் உள்ள சவால்கள் என்ற பெயரிலான தேசிய அளவிலான கருத்தரங்கம் இன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஹரி பரந்தாமன் கூறுகையில், எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாடும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் ஜெயலலிதா சமாதியில் உட்கார்ந்து கொண்டு நீட்டுக்கு விலக்கு அளிக்கும் வரை போராட வேண்டும்.
அவ்வாறு போராடினால் எதிர்கட்சியினரும், நாங்களும், இளைஞர்களும் மெரினாவில் நிச்சயம் போராடுவோம்.இதன் மூலம் மிகப் பெரிய எழுச்சியை உண்டாக்கி நீட் தேர்வை துரத்தலாம். பொது பட்டியலில் இருந்து கல்வி இன்னும் நீக்கப்படவில்லை. எனவே நீட் தேர்விலிருந்து தமிழகம் விலக்கு பெற சட்டத்தில் இடம் உள்ளது என்றார்.
அப்போது பேசிய பா.ரஞ்சித் நீட் தேர்வால் ஏழை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நீட் தேர்விலிருந்து விலக்கு கோரி பிரதமர் நரேந்திர மோடியை விரைவில் சந்தித்து வலியுறுத்துவேன் என்றார்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications