ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் தினகரன் அபார வெற்றி!- Live
ஆர்.கே.நகர் தொகுதி வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
-ஆர்கே நகரில் அமோக வெற்றி... சான்றிதழை பெற்றார் டிடிவி தினகரன்
-வெற்றி பெற்ற சான்றிதழை வாங்க புறப்பட்டார் தினகரன்
-ராணி மேரி கல்லூரியில் சான்றிதழை வாங்க புறப்பட்டார்
-ஆர்.கே.நகரில் திமுக, பாஜக வேட்பாளர்கள் உட்பட 52 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்
-பெரும் போராட்டத்திற்கு பிறகு அதிமுக டெபாசிட்டை காப்பாற்றியது
-40707 வாக்குகள் வித்தியாசத்தில் தினகரன் வெற்றி வாகை
-50.32 சதவீதம் வாக்குகள் பெற்று தினகரன் அசத்தல்
-ஆர்.கே.நகரில் அபாரம்: 89013 வாக்குகள் பெற்று தினகரன் வெற்றி
-ஆர்.கே.நகரில் ஜெயலலிதா பெற்ற வாக்குவித்தியாசத்தை கடந்தார் தினகரன்
-18வது சுற்றிலும் டிடிவி தினகரன் முன்னிலை
-86472 வாக்குகள் பெற்றுள்ளார் தினகரன்
-அதிமுக 47115 வாக்குகளும், திமுக 24,075 வாக்குகளும் பெற்றுள்ளன
-நாம் தமிழர் 3645 வாக்குகள், பாஜக 1236 வாக்குகள்
-இரவு 9 மணிக்கு வெற்றிச் சான்றிதழை பெற்றுக் கொள்ள வருகிறார் தினகரன்
-தினகரன் வெற்றி எதிரொலி - ஆதரவாளர்கள் பெரும கொண்டாட்டம்
-ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றி
-ஆர்.கே.நகரில் சுயேச்சை வேட்பாளர் டிடிவி தினகரன் வெற்றி உறுதியானது
-இன்னும் 32,000 வாக்குகள் எண்ணப்பட உள்ள நிலையில் வெற்றி உறுதி
-எஞ்சிய வாக்குகள் அனைத்தும் பிற வேட்பாளர்களுக்கு சென்றாலும் தினகரன் வெற்றி உறுதி
-தமிழகத்தில் இடைத்தேர்தலில் முதல் முறையாக சுயேச்சை வேட்பாளர் வெற்றி பெற்று சாதனை
-ஆர்கே நகர் தேர்தலில் பாஜக பெற்ற வாக்குகள் குறித்து விசிகவின் ரவிக்குமார் கருத்து
-பாஜக வாங்கும் வாக்குகளைப் பார்த்த பிறகும் ரஜினி கட்சி ஆரம்பிப்பார் என்று தோன்றவில்லை - ரவிக்குமார்
-ஆர்.கே.நகர் தேரர்தல் முடிவுகள் பற்றி அதிமுக சிந்திக்க வேண்டும்- இல.கணேசன்
-உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக நிலைமை மாறும்-இல.கணேசன்
-16-வது சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
14 சுற்றுகள் முடிவில்
சுயேச்சை தினகரன் 68712
மதுசூதனன் 36217
மருதுகணேஷ் 18924
கலைக்கோட்டுதயம் 3316
நாகராஜன் 1126
13 சுற்றுகள் முடிவில்
சுயேச்சை தினகரன் 64627
மதுசூதனன் 33436
மருதுகணேஷ் 17140
கலைக்கோட்டுதயம் 2607
நாகராஜன் 837
-13-வது சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
-அதிமுகவும் இரட்டை இலையும் எங்களுக்கு வந்துசேரும்: தங்க தமிழ்ச்செல்வன்
சுயேச்சை வேட்பாளர் ஜெயித்து சாதனை படைத்து விட்டார் - தங்க தமிழ் செல்வன்
-நாங்கள் பணப்பட்டுவாடா செய்யவில்லை - தங்க தமிழ் செல்வன்
-மக்கள் அதை எதிர்பார்க்கவில்லை - தங்க தமிழ் செல்வன்
-அதிமுகவின் பணப்பட்டுவாடாவை மீறி ஜெயித்துள்ளோம்
-அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதை பொருத்திருந்து பாருங்கள்
-நாங்கள் யாரையும் விரோதியாக பார்க்கவில்லை - தங்க தமிழ் செல்வன்
-தொண்டர்களும், மக்களும் எங்கள் பக்கம் இருக்கிறார்கள்
- ஸ்லீப்பர் செல்களை சேர்த்து மொத்தம் 60 எம்எல்ஏக்களும் இருக்கிறார்கள்
- அமைச்சர்களும் எங்கள் பக்கம் வருவார்கள் - தங்க தமிழ் செல்வன்
12 சுற்றுகள் முடிவில்
சுயேச்சை தினகரன் 60,286
மதுசூதனன் 27737
மருதுகணேஷ் 14481
கலைக்கோட்டுதயம் 2607
நாகராஜன் 760
11 சுற்றுகள் முடிவில்
சுயேச்சை தினகரன் 54,316
மதுசூதனன் 27737
மருதுகணேஷ் 14431
கலைக்கோட்டுதயம் 2347
நாகராஜன் 712
-ஆர்.கே. நகரில் பணநாயகம் பெற்ற வெற்றி இது - எச்.ராஜா
-பணம் கொடுக்க வருபவர்களை மக்கள் அடிக்க வேண்டும் - எச். ராஜா
-பணம் கொடுத்தால் எப்படி போய் கேட்க முடியும் - எச். ராஜா
-சுப்ரமணியசாமி கருத்துக்கு பதில் சொல்ல மறுத்து தெறித்து ஓடிய எச். ராஜா
-10வது சுற்று முடிவில் தினகரன் 23,241 வாக்குகள் முன்னிலை
-தினகரன் 48,594 வாக்குகள் பெற்று முன்னிலை
-அதிமுக மதுசூதனன் 23,834 வாக்குகள் பெற்றுள்ளார்
-11வது சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
-மருதுகணேஷ் (திமுக) - 13,015 வாக்குகள் பெற்றுள்ளார்
-பணம் யார் அதிகம் கொடுத்தார்களோ அவர்களுக்கு ஏற்ப வாக்குகள் விழுந்துள்ளன- கரு.நாகராஜன்
-பணத்தை மட்டுமே நம்பி வெற்றி பெறுவதில் பாஜகவுக்கு நம்பிக்கையில்லை- பாஜக வேட்பாளர் கரு.நாகராஜன்
-தேர்தல் முறையாக நடைபெறவில்லை என்பதற்கு தேர்தல் ஆணையமே பொறுப்பு-கரு.நாகராஜன்
-பாஜக திட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க பாடுபடுவோம்-கரு.நாகராஜன்
-பாஜகவுக்கு மட்டுல்ல, திமுக எல்லா கட்சிகளுக்குமே வாக்குகள் குறைந்துள்ளன- கரு.நாகராஜன்
-ஆர்.கே.நகர்: 14வது மேஜையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு
-ஆர்.கே நகரில் வாக்கு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது
-கோளாறு காரணமாக 9வது சுற்று முடிவை அறிவிப்பதில் சிக்கல்
-எம்ஜிஆர் நினைவிடத்தில் தினகரன் அஞ்சலி
-8வது சுற்றின் முடிவில் தினகரன் 39,548 வாக்குகள் பெற்று முன்னிலை
-அதிமுகவின் மதுசூதனன் 19,525 வாக்குகள் பெற்றுள்ளார்
-20,023 வாக்குகள் அதிகம் பெற்று தினகரன் முன்னிலையில் இருக்கிறார்
-திமுக இந்த தேர்தலில் காணாமல் போகும் நிலை ஏற்பட்டுவிட்டது- டிடிவி தினகரன் ஆதரவாளர் புகழேந்தி
-பாஜகவை விட நோட்டாவுக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளன- புகழேந்தி
-ஆர்கே நகரில் சாதித்துக்காட்டிய தினகரனுக்கு திவாகரன் வாழ்த்து
5 சுற்றுகள் முடிவு விவரம்:
தினகரன் 24132
மதுசூதனன்13057
மருதுகணேஷ் 6606
கலைக்கோட்டுதயம் 1245
கருநாகராஜ் 318
தற்போதைய நிலவரம்:
தினகரன் 22447
மதுசூதனன்11304
மருதுகணேஷ் 6629
கலைக்கோட்டுதயம் 962
கருநாகராஜ் 318
-தமிழகம் தன்மானத்தில் பின்னடைந்துள்ளது- தமிழிசை தாக்கு
-தினகரனுக்கு வாக்கு கிடைக்க என்ன காரணம்? தமிழிசை
-தமிழகத்திற்கு உழைத்தாரா, பாடுபட்டாரா? தமிழிசை
-தினகரனுக்கு இதுவரை 53.16% வாக்குகள் கிடைத்துள்ளன
-மதுசூதனனுக்கு 25.33%; மருதுகணேஷூக்கு 13.18% வாக்குகள்
-தினகரனுக்கு ராதாரவி வாழ்த்து
-200 ஆண்டுகள் ஆனாலும் பாஜக காலூன்ற முடியாது- ராதாரவி
தற்போதைய நிலவரம்:
தினகரன் 20298
மதுசூதனன் 9672
மருதுகணேஷ் 5091
கலைக்கோட்டுதயம் 962
கருநாகராஜ் 318
நோட்டா 453
- 4-வது சுற்றிலும் சுயேச்சை வேட்பாளர் தினகரன் முன்னிலை
தற்போதைய நிலவரம்:
தினகரன் 15868
மதுசூதனன் 7033
மருதுகணேஷ் 3691
கலைக்கோட்டுதயம் 737
நோட்டா 333
கருநாகராஜ் 220
-3-வது சுற்று முடிவிலும் தினகரன் முன்னிலை வகிக்கிறார்
-ஜெ.வுக்கு அடுத்ததாக என்னை எம்.எல்.ஏவாக தேர்வு செய்துவிட்டனர்: தினகரன்
-மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர்- தினகரன்
-3 மாதத்தில் ஆட்சியே கவிழப் போகிறது- தினகரன்
-மதுரை விமான நிலையத்தில் தினகரன் பேட்டி
-ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் மாபெரும் வெற்றி தந்துள்ளனர்
-ஆர்கே நகர் வெற்றிக்காக பாடுபட்ட அனைவருக்கும் நன்றி- தினகரன்
-ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் 7.5 கோடி மக்களின் எண்ணத்தை பிரதிபலித்துள்ளனர்
-சென்னையில் தினகரன் பேட்டி
-ஆர் கே நகரில் 2-ம் சுற்று முடிவில் நோட்டா 208
-தற்போதைய நிலவரம்:
தினகரன் 10421
மதுசூதனன் 4521
மருதுகணேஷ் 2324
கலைக்கோட்டுதயம் 459
கருநாகராஜ்117
-3-வது சுற்று வாக்கு எண்ணிக்கை தொடக்கம்
-2-வது சுற்று முடிவிலும் சுயேச்சை வேட்பாளர் தினகரன் முன்னிலை
-தினகரன் ஆதரவாளர்கள் பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கி உற்சாக கொண்டாட்டம்
-தினகரன் வீடு முன்பாக ஆதரவாளர்கள் உற்சாக கொண்டாட்டம்
Chennai: TTV Dhinakaran supporters celebrate outside a counting center as early official EC trends indicate his lead #RKNagarByPoll pic.twitter.com/XfBkehnknB
— ANI (@ANI) December 24, 2017
-வாக்கு எண்ணும் மையத்தைவிட்டு சுயேச்சைகள் தப்பி ஓட்டம்
-உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்பதால் வெளியேறியதாக 3 சுயேச்சைகள் தகவல்
தற்போதைய நிலவரம்:
தினகரன் 10,421
மதுசூதனன் 4,521
மருதுகணேஷ் 2,383
-வாக்கு எண்ணிக்கையில் அமைதி திரும்பிவிட்டது
-2-வது சுற்று வாக்கு எண்ணிக்கை மீண்டும் தொடங்கியது
-45 நிமிடங்களுக்கும் மேலாக வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்
-வாக்கு எண்ணும் மையத்தில் துணை ராணுவம் குவிப்பு
-வாக்கு எண்ணும் அலுவலர்கள் தாக்கப்பட்டதால் ராணுவம் குவிப்பு
-நாற்காலிகளை வீசி மேஜைகளை உடைத்ததால் போர்க்களமானது வாக்கு எண்ணிக்கை மையம்
-அதிமுக பெண் ஏஜெண்ட் உட்பட 4 பேர் வெளியேற்றம்
-வாக்கு எண்ணிக்கை மையத்தில் அலுவலர்கள் மீதும் தாக்குதல் என தகவல்
-தினகரன் - அதிமுகவினர் இடையே மோதல்
-ரகளையில் ஈடுபட்ட 3 ஏஜெண்டுகள் வெளியேற்றம்
-வாக்கு மையத்தில் ரகளை- மேஜைகள் உடைப்பு
-வாக்கு எண்ணிக்கை மையத்தில் கூச்சல் குழப்பம்
-கூச்சல் குழப்பம் நீடிப்பதால் வாக்கு எண்ணிக்கை தற்காலிக நிறுத்தம்
-ஆர்கே நகரில் பாஜகவை விட நோட்டாவுக்கு வாக்குகள் அதிகம்
-பாஜக- 66; நோட்டா- 122
-கலைக்கோட்டுதயம் 258
-கருநாகராஜ் 66
-போகப் போகத் தெரியும் இந்த பூவின் வாசம் புரியும் - மதுசூதனன்
-ஆர்கே நகர் முதல் சுற்று முடிவுகள் குறித்து மதுசூதனன் கருத்து
-ஆர்கேநகர் முதல் சுற்று முடிவுகள் ஓட்டு விற்பனை வெற்றிகரமாக நடந்திருப்பதை காட்டுகிறது - தமிழிசை
தற்போதைய நிலவரம்:
தினகரன் 5339
மதுசூதனன் 2738
மருதுகணேஷ் 1182
கலைக்கோட்டுதயம் 12
கருநாகராஜ் 8
-தற்போதைய நிலவரப்படி தினகரன் 2601 வாக்குகள்
-2-ம் சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
முதல் சுற்று முடிவுகள்:
தினகரன் 1891
மதுசூதனன் 647
மருதுகணேஷ் 360
கலைக்கோட்டுதயம் 12
கருநாகராஜ் 8
தற்போதைய நிலவரம்:
தினகரன் 636
மதுசூதனன் 423
மருதுகணேஷ் 184
கலைக்கோட்டுதயம் 12
கருநாகராஜ் 8
-பாஜகவின் கருநாகராஜன் - 7
-நாம் தமிழர் கலைக்கோட்டுதயம்- 1
- முதல் சுற்றில் தினகரன் முன்னிலை
- முதல் சுற்றில் சுயேச்சை வேட்பாளர் தினகரன் 598
- அதிமுகவின் மதுசூதனன் 243
- திமுகவின் மருதுகணேஷ் 120
- டிடிவி தினகரன் முன்னிலையில் உள்ளார்
- இரண்டாம் இடத்தில் அதிமுக, மூன்றாவது இடத்தில் திமுக
- ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை
- ஆர்கே நகரில் மொத்தம் 4 தபால் வாக்குகள் உள்ளன
- 4 தபால் வாக்குகளில் ஒன்றுதான் பதிவானது
- பதிவான ஒரே தபால் வாக்கும் திமுக வேட்பாளர் மருது கணேஷூக்கு கிடைத்து
- தபால் வாக்கு எண்ணிக்கை முடிவில் திமுக முன்னிலை
- பதிவான ஒரே ஒரு தபால் ஓட்டு திமுகவுக்கு கிடைத்தது
- ஒரே ஒரு தபால் வோட்டு திமுகவுக்கு கிடைத்தது
- ஆர்.கே.நகரில் பதிவான ஒரே ஒரு தபால் வாக்கும் திமுகவுக்கு கிடைத்துள்ளது
#RKNagarByPoll: Counting of votes begins; #Visuals from outside a counting center in #Chennai pic.twitter.com/c1OSHQ03Tf
— ANI (@ANI) December 24, 2017
-ஆர்.கே.நகரில் ஒரே ஒரு தபால் ஓட்டு பதிவாகியிருந்தது
-தபால் வாக்கு முடிவு சற்று நேரத்தில் வெளியாகும்
Apart from BJP other parties that contested used corrupt practices and distributed money in a big way: Karu Nagarajan, BJP candidate from #RKNagar outside a vote counting center in #Chennai pic.twitter.com/4oWQyiKruz
— ANI (@ANI) December 24, 2017
- ஆர்.கே.நகர் தொகுதி வாக்கு எண்ணிக்கை பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது
-ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு பாதுகாப்பு அதிகரிப்பு
- ஆர்.கே.நகர் தொகுதியில் பதிவான 1.76 லட்சம் வாக்குகள் எண்ணப்படுகின்றன.
- ராணி மேரி கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை
#RKNagarByPoll: Counting of votes will begin at 8 am. Visuals from outside a counting center in #Chennai pic.twitter.com/ORKYAc9LF7
— ANI (@ANI) December 24, 2017
- வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
- ஆர்.கே.நகரில் முதன் முதலாக பணம் பறக்கும் தேர்தல் நடந்தது- கரு.நாகராஜன்
- வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ராணி மேரி கல்லூரி வளாகத்தில் பாஜக வேட்பாளர் கரு நாகராஜன் பேட்டி
- ஆர்.கே.நகரில் திரும்பிய பக்கமெல்லாம் பணப்பட்டுவாடா- கரு.நாகராஜன்
- ஜனநாயக முறைப்படி பாஜக தேர்தலை சந்தித்துள்ளது
- பாஜகவுக்கு கிடைக்கும் ஒவ்வொரு வாக்கும் பொன்னானவை: கரு. நாகராஜன்
- ஆர்.கே.நகர் தொகுதி வாக்கு எண்ணிக்கை சற்று நேரத்தில் தொடங்குகிறது
- ராணிமேரி கல்லூரியில் அனுமதிக்கும் நேரம் முன்பே வேட்பாளர்களின் முகவர்கள் திரண்டதால் தள்ளுமுள்ளு
- வாக்கு எண்ணிக்கை 19 சுற்றுகளாக நடத்தப்படும்
- முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்
-வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ராணி மேரி கல்லூரியில் 3 அடுக்கு பாதுகாப்பு
-ராணி மேரி கல்லூரியில் போலீசார் குவிப்பு
- நவம்பர் 24-ந் தேதி முதல் ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன.
- ஆர்.கே.நகர் தொகுதியில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,28,234; ஆண்கள்: 110903 பெண்கள்: 117232; மூன்றாம் பாலினத்தவர்- 99
- ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் அட்டவணை:
வேட்பு மனு தாக்கல் தொடக்கம்: நவம்பர் 27
வேட்பு மனு தாக்கல் செய்ய இறுதி நாள்: டிசம்பர் 4
வேட்பு மனு பரிசீலனை செய்யும் நாள்: டிசம்பர் 5
வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள்: டிசம்பர் 7
வாக்குப்பதிவு நாள் : டிசம்பர் 21
வாக்கு எண்ணிக்கை நாள்: டிசம்பர் 24
- ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட மொத்தம் 145 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவர்களில் 126 பேர் சுயேச்சைகள்.
- ஆர்.கே.நகர் தொகுதியில் சுயேச்சைகளாக போட்டியிட தாக்கல் செய்த நடிகர் விஷால் மனு முதலில் நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் தள்ளுபடி செய்யப்பட்டது. மீண்டும் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டு நள்ளிரவில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதேபோல் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் வேட்புமனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
- டிசம்பர் 6-ந் தேதியன்று மொத்தம் 76 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது
- டிசம்பர் 7-ந் தேதியன்று பரிசீலனைக்குப் பின் 59 பேர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.
- டிசம்பர் 19-ந் தேதி ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத் தேர்தலுக்கான பிரசாரம் நிறைவடைந்தது.
- டிசம்பர் 21- ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது.