ஜல்லிக்கட்டுக்காக போராட்டம்.. சென்னை சென்ட்ரலில் ரயிலை மறிக்க முயன்ற ச.ம.க தொண்டர்கள் கைது
சென்னை: ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி சமத்துவ மக்கள் கட்சி சார்பில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று ரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. ஆனால் போலீசார் முன்கூட்டியே அக்கட்சியினரை கைது செய்தனர்.
ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு மத்திய அரசு வழங்கிய அனுமதிக்கு, சுப்ரீம்கோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது. இதனால் ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்தவிருந்த தமிழக மக்கள் அதிர்ச்சியிலுள்ளனர்.

ஜல்லிக்கட்டுக்கு அனுமதியளிக்க கோரிக்கைவிடுத்து, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று ரயில் மறியல் போராட்டம் நடத்துவதாக சரத்குமாரின், சமத்துவ மக்கள் கட்சி நேற்றே அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
அறிவித்தபடி இன்று அக்கட்சியை சேர்ந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள், சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தனர். ஜல்லிக்கட்டை நடத்த அனுமதிக்கும்படி அவர்கள் கோஷங்கள் எழுப்பினர். ரயில் நிலையத்திற்குள் நுழைய சென்ற அவர்களை ரயில்வே பாதுகாப்பு போலீசாரும், உள்ளூர் போலீசாரும், இணைந்து தடுத்தனர்.
பின்னர் சமத்துவ மக்கள் கட்சியினர் கைது செய்யப்பட்டு, அருகிலுள்ள காவலர் சமுதாய கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர். மாலையில் அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது. இந்த போராட்டத்தில் எம்.எல்.ஏ எர்ணாவூர் நாராயணன், கட்சி பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
-
சென்னை உட்பட.. 30 மாவட்டங்களுக்கு பறந்த மஞ்சள் அலர்ட்! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
சென்னையின் மெகா மேக் ஓவர்.. நகரின் மையத்தில்.. வரப்போகும் 3 மேஜர் திட்டங்கள்.. இன்ஜினியரிங் அதிசயம்! -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ்












Click it and Unblock the Notifications