ஜல்லிக்கட்டுக்காக போராட்டம்.. சென்னை சென்ட்ரலில் ரயிலை மறிக்க முயன்ற ச.ம.க தொண்டர்கள் கைது
சென்னை: ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி சமத்துவ மக்கள் கட்சி சார்பில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று ரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. ஆனால் போலீசார் முன்கூட்டியே அக்கட்சியினரை கைது செய்தனர்.
ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு மத்திய அரசு வழங்கிய அனுமதிக்கு, சுப்ரீம்கோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது. இதனால் ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்தவிருந்த தமிழக மக்கள் அதிர்ச்சியிலுள்ளனர்.

ஜல்லிக்கட்டுக்கு அனுமதியளிக்க கோரிக்கைவிடுத்து, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று ரயில் மறியல் போராட்டம் நடத்துவதாக சரத்குமாரின், சமத்துவ மக்கள் கட்சி நேற்றே அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
அறிவித்தபடி இன்று அக்கட்சியை சேர்ந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள், சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தனர். ஜல்லிக்கட்டை நடத்த அனுமதிக்கும்படி அவர்கள் கோஷங்கள் எழுப்பினர். ரயில் நிலையத்திற்குள் நுழைய சென்ற அவர்களை ரயில்வே பாதுகாப்பு போலீசாரும், உள்ளூர் போலீசாரும், இணைந்து தடுத்தனர்.
பின்னர் சமத்துவ மக்கள் கட்சியினர் கைது செய்யப்பட்டு, அருகிலுள்ள காவலர் சமுதாய கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர். மாலையில் அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது. இந்த போராட்டத்தில் எம்.எல்.ஏ எர்ணாவூர் நாராயணன், கட்சி பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
-
Gold Rate Today: ஒரே அடியாக சரிந்த தங்கம் விலை.. ரூ.1,120 குறைந்தது! சென்னையில் ஒரு கிராம் எவ்வளவு? -
கூவத்தின் மீது 15 கி.மீ வித்தை.. டெட் லைன் குறிச்சாச்சு! சென்னையில் வரும் பிரம்மாண்ட 2 அடுக்கு பாலம் -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட்












Click it and Unblock the Notifications