இதுதாண்டா அரசியல்.... இரண்டாக உடைந்த சமத்துவ மக்கள் கட்சி... மீண்டும் அதிமுகவில்.. இரு கட்சிகளாக!
சென்னை: கடந்த ஐந்து வருடங்களாக அதிமுக கூட்டணியில் இடம் பெற்று, சமீபத்தில் உடைந்து இரண்டாக மாறிய சமத்துவ மக்கள் கட்சியின் இரு பிரிவுகளும் மீண்டும் அதிமுக கூட்டணியில் இடம் பெறும் வினோதம் நடந்துள்ளது.
சரத்குமாரின் கட்சி அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி. அக்கட்சி கடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து இருதொகுதிகளில் போட்டியிட்டது. அதில் சரத்குமாரும், எர்ணாவூர் நாராயணனும் வெற்றி பெற்றனர்.

இந்த நிலையில் சமீபத்தில் ஜெயலலிதாவின் அன்பு வளையத்திலிருந்து நீக்கப்பட்டார் சரத்குமார். அவரை ஜெயலலிதா ஓரம் கட்டினார். நடிகர் சங்கத் தேர்தலிலும் கூட சரத்குமாரை அவர் ஆதரிக்கவில்லை. இதனால் விஷால் தரப்பு ஜெயிக்கும் நிலை ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து சமீபத்தில் சரத்குமாரின் கட்சி இரண்டாக உடைந்தது. எர்ணாவூர் நாராணன் சமத்துவ மக்கள் கழகம் என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். மேலும் பலர் விலகி பாஜகவில் போய்ச் சேர்ந்தனர்
இந்த நிலையில் சரத்குமாரும், அதிமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து அவர் பாஜக முகாமுக்கு திடீரென தாவினார். மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனை சந்தித்துப் பேசினார். விஜயகாந்த்தும் தன்னைப் போல பாஜக கூட்டணிக்கு வர வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்தப் பின்னணியில் எர்ணாவூர் நாராயணை அதிமுக தலைமை சமீபத்தில் அழைத்துப் பேசியது. இதையடுத்து அக்கட்சி, அதிமுக கூட்டணியில் இணைந்தது. இந்தச் சூழலில் தற்போது சரத்குமாரையும் ஜெயலலிதா அழைத்து பேசி மீண்டும் கூட்டணியில் சேர்த்துள்ளார். இதன் மூலம் இரு சமத்துவ மக்கள் கட்சிப் பிரிவுகளும் ஒரே கூட்டணியில் மீண்டும் இடம் பெறுகின்றன.
இருவரும் தனித் தனிக் கட்சிகளாக தொடர்வார்களா அல்லது (ஜெயலலிதா அறிவுறுத்தலின் பேரில்) மீண்டும் ஒரே கட்சியாக இணைந்து செயல்படுவார்களா என்பது தெரியவில்லை.
-
அதிமுகவுக்கு விவசாய அமைப்பு, ரஜினி ரசிகர் மன்றம் வரிசையில் மேலும் ஒரு அமைப்பு ஆதரவு! இபிஎஸ் ஹேப்பி! -
ஜெயலலிதா இருந்தவரை வாலை சுருட்டி இருந்தாங்க.. நான் இருந்திருந்தால்.. கண் சிவந்த சசிகலா -
தேர்தல் நேரத்தில் கல்லா கட்டும் 'குட்டி குட்டி' நிறுவனங்கள்.. சத்தமே இல்லாமல் நடக்கும் மெகா பிஸ்னஸ்! -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல்












Click it and Unblock the Notifications