இதுதாண்டா அரசியல்.... இரண்டாக உடைந்த சமத்துவ மக்கள் கட்சி... மீண்டும் அதிமுகவில்.. இரு கட்சிகளாக!
சென்னை: கடந்த ஐந்து வருடங்களாக அதிமுக கூட்டணியில் இடம் பெற்று, சமீபத்தில் உடைந்து இரண்டாக மாறிய சமத்துவ மக்கள் கட்சியின் இரு பிரிவுகளும் மீண்டும் அதிமுக கூட்டணியில் இடம் பெறும் வினோதம் நடந்துள்ளது.
சரத்குமாரின் கட்சி அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி. அக்கட்சி கடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து இருதொகுதிகளில் போட்டியிட்டது. அதில் சரத்குமாரும், எர்ணாவூர் நாராயணனும் வெற்றி பெற்றனர்.

இந்த நிலையில் சமீபத்தில் ஜெயலலிதாவின் அன்பு வளையத்திலிருந்து நீக்கப்பட்டார் சரத்குமார். அவரை ஜெயலலிதா ஓரம் கட்டினார். நடிகர் சங்கத் தேர்தலிலும் கூட சரத்குமாரை அவர் ஆதரிக்கவில்லை. இதனால் விஷால் தரப்பு ஜெயிக்கும் நிலை ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து சமீபத்தில் சரத்குமாரின் கட்சி இரண்டாக உடைந்தது. எர்ணாவூர் நாராணன் சமத்துவ மக்கள் கழகம் என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். மேலும் பலர் விலகி பாஜகவில் போய்ச் சேர்ந்தனர்
இந்த நிலையில் சரத்குமாரும், அதிமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து அவர் பாஜக முகாமுக்கு திடீரென தாவினார். மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனை சந்தித்துப் பேசினார். விஜயகாந்த்தும் தன்னைப் போல பாஜக கூட்டணிக்கு வர வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்தப் பின்னணியில் எர்ணாவூர் நாராயணை அதிமுக தலைமை சமீபத்தில் அழைத்துப் பேசியது. இதையடுத்து அக்கட்சி, அதிமுக கூட்டணியில் இணைந்தது. இந்தச் சூழலில் தற்போது சரத்குமாரையும் ஜெயலலிதா அழைத்து பேசி மீண்டும் கூட்டணியில் சேர்த்துள்ளார். இதன் மூலம் இரு சமத்துவ மக்கள் கட்சிப் பிரிவுகளும் ஒரே கூட்டணியில் மீண்டும் இடம் பெறுகின்றன.
இருவரும் தனித் தனிக் கட்சிகளாக தொடர்வார்களா அல்லது (ஜெயலலிதா அறிவுறுத்தலின் பேரில்) மீண்டும் ஒரே கட்சியாக இணைந்து செயல்படுவார்களா என்பது தெரியவில்லை.
-
திமுகவுடன் குதிரை பேரம் நடத்தியது யார்?.. எடப்பாடிக்கு செங்கோட்டையன் அடுக்கடுக்கான கேள்வி! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா!












Click it and Unblock the Notifications