கணவரை கோர்ட்டில் ஆஜர்படுத்த கோரி சசிகலா புஷ்பா ஆட்கொணர்வு மனு
அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து போலீஸ் அழைத்துச் சென்ற கணவர் லிங்கேஸ்வரனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக் கோரி ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.
சென்னை: சசிகலா புஷ்பாவின் கணவர் மற்றும் அவரின் வழக்கறிஞர் ஆகியோர் புதன்கிழமையன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு சசிகலா புஷ்பாவின் கணவர் மற்றும் அவரின் வழக்கறிஞர், அதிமுகவினரால் சராமாரியாக தாக்கப்பட்டனர். இதில் அவரக்ளுக்கு மண்டை உடைந்து ரத்தம் கசிந்தது.
போலீசார் அவரை பாதுகாப்பாக அழைத்து சென்றனர். பின்னர் அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு மைலாப்பூர் காவல் நிலையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டார். அத்துமீறி ஆட்களுடன் வந்து தாக்க முயன்றதாக சிந்து ரவிச்சந்திரன் புகார் அளித்தார். இதையடுத்து ராயபேட்டை போலீசார் லிங்கேஸ்வர திலகர் உட்பட 10 பேர் மீது பிரிவு , ஐபிசி 144 , 448 ,323, 327 , 506(2) வழக்குப்பதிவு செய்தனர்.

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்ற என கணவர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். இப்போது வரைக்கும் அவர் எங்கிருக்கிறார் என தெரியவில்லை. காலையில் இருந்து எனது கணவரை தேடிக்கொண்டிருக்கிறேன். இது மனித உரிமை மீறல் என கூறினார் சசிகலா புஷ்பா.

தனது கணவர் தாஅக்கப்பட்டது குறித்து அவர் எங்கே இருக்கிறார் என்று சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி அலுவலகம் வரை கேட்டும் பதில் இல்லை என்று கூறியுள்ள சசிகலா புஷ்பா இது பற்றி ஆட்கொணர்வு மனு ஒன்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் இன்று காலை சசிகலா புஷ்பாவின் கணவர் லிங்கேஸ்வர திலகத்தை ஆஜர்படுத்த வேண்டும், இல்லையேல் அவரது நிலை குறித்து போலீசார் அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications