தினகரனின் விஸ்வரூபத்தை நினைத்து சிறையில் கதறி அழுத சசிகலா!
பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை தமிழக போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் அண்மையில் சந்தித்துள்ளார். இச்சந்திப்பின் போது தினகரன் நடவடிக்கைகள் குறித்த அதிருப்தியை வெளிப்படுத்தினாராம் சசிகலா.
சென்னை: பெங்களூரு சிறையில் தம்மை சந்தித்த தமிழக போலீஸ் உயர் அதிகாரியிடம் தினகரனின் நடவடிக்கைகள் குறித்து புலம்பி அழுதாராம் சசிகலா. போலீஸ் உயர் அதிகாரி திடீரென சசிகலாவை சந்தித்த தகவலால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிர்ந்து போனார் என்கின்றன கோட்டை வட்டாரங்கள்.
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை உறுதி செய்யப்பட்டு பெங்களூருவில் சிறைவாசத்தை அனுபவித்து வருகிறார் சசிகலா. அவர் சிறைக்கு சென்றபோது உறவினர்கள் தொடர்ந்து அவரை சந்தித்து வந்தனர்.
ஆனால் கடந்த சில நாட்களாக சசிகலாவை உறவினர்கள் யாரும் எட்டிப்பார்க்காமல் இருந்தனர். இந்த நிலையில் தமிழக போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் சசிகலாவை திடீரென சிறையில் சந்தித்துள்ளார்.

வரவழைத்த சசி?
தமக்கு மிக விசுவாசமான அந்த அதிகாரியை சசிகலாதான் வரவழைத்ததாகவும் கூறப்படுகிறது. இச்சந்திப்பின் போது தினகரன், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோரின் நடவடிக்கைகள் குறித்து அந்த போலீஸ் அதிகாரி விவரித்துள்ளார்.

தினகரனின் தனி ஆவர்த்தனம்
மேலும் அதிமுகவையும் ஆட்சியையும் தம் வசமாக்கிக் கொள்ள தினகரன் படுதீவிரமாக முயற்சிக்கிறார்; அவருக்கு ஒரு நால்வர் அணி உருவாக்கப்பட்டு அவர்களது தூபத்தை நம்பி அனைத்து முடிவுகளையும் எடுக்கிறார் என கூறியுள்ளார்.

கண்ணீர்விட்ட சசி
தினகரன் மீது தாம் நம்பிக்கை வைத்திருந்ததாகவும் இப்போது தம்மையே ஓரம்கட்டுவதில் முனைப்பாக இருப்பதையும் குறிப்பிட்டு பேசிய சசிகலா திடீரென மனம் உடைந்து கண்ணீர்விட்டு அழுதாராம். அத்துடன் தினகரன், எடப்பாடி பழனிச்சாமியை தொடர்ந்து கண்காணிப்பது குறித்தும் சில வியூகங்களை குறிப்பிட்டு சொல்லி அனுப்பியிருக்கிறாராம் சசிகலா.

எடப்பாடி ஷாக்
சசிகலாவுடனான இந்த அதிகாரியின் சந்திப்புதான் தலைமைச் செயலக வட்டாரங்களில் ஹாட் டாபிக்காக ஓடுகிறது. போலீஸ் அதிகாரியின் இந்த திடீர் சந்திப்பு குறித்து கேள்விப்பட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ரொம்பவே அதிர்ந்தும் போனார் என்கின்றன கோட்டை வட்டாரங்கள்.
-
திமுகவுடன் குதிரை பேரம் நடத்தியது யார்?.. எடப்பாடிக்கு செங்கோட்டையன் அடுக்கடுக்கான கேள்வி! -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
அஸைன்மென்டுடன் இறங்கிய செங்க்ஸ், ஆதவ்.. ஆல் அவுட் ஆகும் அதிமுக.. அடுத்த விக்கெட் யார்? -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications