எம்ஜிஆர் சொத்தை நீதிபதி ஹரிபரந்தாமன் குழு நிர்வகிக்கலாம்... ஹைகோர்ட் உத்தரவு!
எம்ஜிஆரின் சொத்துகளை நீதிபதி ஹரிபந்தாமன் குழு நிர்வகிக்கலாம் என்று சென்னை ஹைகோர்ட் கூறியுள்ளது.
சென்னை : எம்ஜிஆரின் சொத்துகளை நிர்வகிக்க நீதிபதி ஹரிபரந்தாமன் குழுவிற்கு அனுமதி அளித்து சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டள்ளது.
மறைந்த முதல்வர் எம்ஜிராமச்சந்திரன் அறக்கட்டளைக்கு சொந்தமாக ராமாவரத்தில் காதுகேளாதோருக்கான பள்ளி, அடையாறு சத்யா ஸ்டுடியோவில் பெண்கள் கல்லூரி, ஆலந்தூர் பகுதியில் மார்க்கெட் கடைகள், தி நகரில் எம்ஜிஆர் நினைவிடம், விருகம்பாக்கத்தில் பல கோடி மதிப்பு கட்டிடம் என்று பல்வேறு சொத்துகள் உள்ளன.

எம்ஜிஆருக்கு வாரிசு இல்லை என்பதால் அவருடைய சொத்துகளை யார் நிர்வகிப்பது என்பதில் பிரச்னை எழுந்தது. எம்ஜிஆரின் அண்ணன் எம்ஜி சக்ரபாணியின் மகன்கள் மற்றும் ஜானகியின் அண்ணன் மகள்கடையே பிரச்னைகள் ஏற்பட்டது.
இதனையடுத்து ஜானகியின் அண்ணன் மகள் லதா ராஜேந்திரன் வாடகைதாரர் சாமிநாதன் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை நீண்ட நாட்கள் நடைபெற்ற பின்னர் தனி நீதிபதி எம்ஜிஆர் அறக்கட்டளை சொத்துகளை நிர்வகிக்க நீதிபதி ஹரிபரந்தாமன் தலைமையில் குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து லதா ராஜேந்திரன் இரண்டு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு மீதான விசாரணையின் போது ஹரிபரந்தாமன் சொத்துகளை நிர்வகிக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று நடைபெற்ற விசாரணையின் போது ஹரிபரந்தாமன் குழு தொடர்ந்து சொத்துகளை நிர்வகிக்க அனுமதி வழங்கப்பட்டு, மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
-
பசு, மாடு, ஆடுகளை வெட்ட தடை.. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு உண்மையில் சொல்வது என்ன? விளக்கம் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications