ஜல்லிக்கட்டை நடத்தக் கோரி பாலமேட்டில் கடையடைப்பு.... கருப்புச் சின்னம் அணிந்து போராட்டம்!
மதுரை: மதுரை மாவட்டம் பாலமேடு கிராமத்தில் இன்று ஜல்லிக்கட்டை நடத்தக் கோரி கிராமத்தினர் ஒன்று கூடி கடையடைப்புப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் தமிழர்கள் பாரம்பரியமாக பல நூற்றாண்டுகளாக நடத்தி வரும் ஜல்லிக்கட்டு இந்த வருடம் நடைபெறுமா என்பது சந்தேகமாகியுள்ளது. இது மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டுக்குப் பெயர் போன அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் மற்றும் ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு உள்ளிட்டற்றை நடத்தி வரும் பிற பகுதிகளில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜல்லிக்கட்டை நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் குவி்ந்து வருகின்றன. இதையடுத்து தமிழக அரசும் மத்திய அரசிடம் அவசர சட்டத்தைப் பிறப்பிக்க வலியுறுத்தியுள்ளது.
இந்த நிலையில், அலங்காநல்லூரில் கடையடைப்புப் போராட்டம், ஆர்ப்பாட்டம் போன்றவை நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல அலங்காநல்லூருக்கு அருகே உள்ள பாலமேட்டில் இன்று கடையடைப்புப் போராட்டம் நடைபெறுகிறது.
ஜல்லிக்கட்டை தொடர்ந்து நடத்தக்கோரி மத்திய-மாநில அரசுகளை வலியுறுத்தி பாலமேட்டில் இன்று 300-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.
ஹோட்டல்கள், டீக்கடைகள், காய்கறி மற்றும் பலசரக்கு கடைகள் உள்ளிட்ட அனைத்து வர்த்தக நிறுவனங்களும் இன்று அடைக்கப்பட்டன. மேலும் கடைகள் முன்பு கறுப்பு கொடிகள் கட்டப்பட்டு இருந்தது.
கடையடைப்பு போராட்டத்துக்கு பாலமேடு கிராம பொதுமகாலிங்க சுவாமி மடத்துக்கமிட்டி நிர்வாகிகள் அழைப்பு விடுத்திருந்தனர். மாடு வளர்ப்போர்களும், மாடுபிடி வீரர்களும், கிராமமக்களும் சட்டைகளில் கறுப்பு சின்னம் அணிந்து இருந்தனர்.
தமிழர்களின் பாரம்பரிய வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு மத்திய-மாநில அரசுகள் அனுமதி அளிக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினார்கள். போராட்டத்தையடுத்து பாலமேடு முழுவதும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications