"மக்களின் முதல்வர்" ஜெயலலிதாவால் கட்சியை விட்டு நீக்கப்பட்டவர் எஸ்.எஸ்.ஆர்.!
சென்னை: மறைந்த பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் மறைவுக்கு மக்களின் முதல்வர் என்று அதிமுகவினரால் அழைக்கப்படும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த சமயத்தில் ஜெயலலிதாவின் முதலாவது ஆட்சிக்காலத்தில் நடந்த ஒரு நிகழ்வு நினைவுக்கு வருகிறது.
ஜெயலலிதா விடுத்துள்ள இரங்கல் செய்தியில், எஸ்.எஸ்.ஆர். என்று அன்புடன் அழைக்கப்படும் எஸ்.எஸ்.ராஜேந்திரனின் மறைவு தமிழ்த் திரையுலகுக்கு பேரிழப்பாகும். அவரது இடத்தை வேறு யாராலும் இனி நிரப்பவே முடியாது. திரையுலகில் மட்டுமல்லாமல் அரசியலிலும் சட்டசபை உறுப்பினராக, மாநிலங்களவை உறுப்பினராக திறம்பட செயலாற்றியவர் எஸ்.எஸ்.ஆர்.

தெளிவான வசன உச்சரிப்போடு சிறந்த நடிப்பாற்றலையும் வெளிப்படுத்தியவர். தனது தலைமுறை நடிகர்கள் மட்டுமல்லாமல், இந்த தலைமுறை நடிகர்களுடனும் இணைந்து நடித்தவர் என்று புகழாரம் சூட்டியுள்ளார் ஜெயலலிதா.
ஆனால் இதே ஜெயலலிதாவால் ஒருமுறை அதிமுகவை விட்டு நீக்கப்பட்டவர் எஸ்.எஸ்.ஆர். என்பது குறிப்பிடத்தக்கது. எஸ்.எஸ்.ஆரை அதிமுகவை விட்டு நீக்கியபோது கட்சியின் முன்னோடி தலைவர்களே அதிர்ச்சி அடைந்தனர். காரணம், எம்.ஜி.ஆருக்கு முன்பே சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் எஸ்.எஸ்.ஆர்.
எப்படி திமுகவுக்காக தனது கடும் உழைப்பைக் கொடுத்தாரோ அதேபோல அதிமுகவிலும் தீவிரமாக செயல்பட்டவர் எஸ்.எஸ்.ஆர். மேலும் எம்.ஜி.ஆரால் பெரிதும் மதிக்கப்பட்டவரும் கூட. அவருக்கு இந்த நிலையா என்று அனைவரும் அதிர்ந்தனர்.
கட்சியை விட்டு நீக்கப்பட்ட பின்னர் ஒரு செய்தியாளருக்கு பேட்டி அளித்த எஸ்.எஸ்.ஆர்., இவர் யார் என்னை நீக்க என்று கூறி கடுமையாக ஜெயலலிதாவை விமர்சித்திருந்தது இன்னும் நமது "காதுகளை" விட்டு மறையவில்லை.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications