தேனி காட்டுத் தீயில் சிக்கிய மாணவிகளை மீட்க போர்க்கால நடவடிக்கை: அமைச்சர் சீனிவாசன்
Subscribe to Oneindia Tamil
Recommended Video

தேனி காட்டுத்தீயில் சிக்கிய மாணவிகளை மீட்கும் பனி தீவிரம்
தேனி: குரங்கனி மலைப் பகுதியில் காட்டுத் தீயில் சிக்கிய மாணவிகளை மீட்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக வனத்துறை அமைச்சர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
தேனி குரங்கனி மலைப் பகுதியில் கொழுக்குமலை என்ற இடத்தில் காட்டுத் தீ பற்றி எரிகிறது. இதில் மலையேற்றத்தில் ஈடுபட்டிருத மாணவி ஒருவர் சிக்கி பலியானார்.

கோவை, ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவிகள் இந்த மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்தனர். இத்தீயில் சிக்கி 40 மாணவிகள் உயிருக்கு போராடி வருகின்றனர்.
இவர்களை மீட்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வனத்துறை அமைச்சர் சீனிவாசன் தெரிவித்துள்ளார். காட்டுத் தீ பற்றி எரியும் பகுதிக்கு மாவட்ட ஆட்சியர், தாசில்தார் உள்ளிட்டோர் விரைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications