ஜெ. சிறை சென்றதால் இறந்தோர் குடும்பங்களுக்கு கொடுத்த நிதி ரூ.7 கோடி!
Subscribe to Oneindia Tamil
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, சிறப்பு நீதிமன்றத்தால் தண்டனைக்குள்ளாகி சிறை சென்றபோது, 'அதிர்ச்சியில்' உயிரிழந்தோர் மற்றும், தற்கொலை செய்து கொண்டோர் குடும்பங்களுக்கு அக்கட்சி மொத்தம் சுமார் ஏழரை கோடியை வழங்கியுள்ளது.
ஜெயலலிதா சிறை சென்ற பிறகு அதிமுக அபிமானிகள் மொத்தம் 244 பேர் தற்கொலை மூலமோ, அதிர்ச்சியாலோ, உயிரிழந்தனர்.

இறந்தவர் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் அளிக்க சமீபத்தில் ஜெயலலிதா உத்தரவிட்டார். அதேபோல மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 4 பேருக்கு தலா ரூ.2 லட்சம் நிதி உதவி அளிக்கப்பட்டது.
ஆகமொத்தம் அதிமுகவிலிருந்து ரூ.7.32 கோடி செலவிடப்பட்டுள்ளதாக அக்கட்சி இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.












Click it and Unblock the Notifications