சென்னையில் பிடிபட்ட ஐ.எஸ்.ஐ. உளவாளிக்கு இலங்கைக்கான பாக். தூதர் உதவி- 'திடுக்' தகவல்!
சென்னை: பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-க்கு ஆதரவாக செயல்பட்டதாக இலங்கையைச் சேர்ந்த நபர் ஒருவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த நபருக்கு இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதர் உதவி செய்துள்ளது அம்பலமாகியுள்ளது.
கைது செய்யப்பட்ட நபரின் பெயர் ஜாகீர் ஹூசைன் என்பதாகும். சென்னை நகரில் தீவிரவாதிகள் ஊடுருவக்கூடும் என்ற மத்திய உளவுப்பிரிவின் எச்சரிக்கையை அடுத்து தமிழக போலீசாரும், சிஐடி க்யூ பிரிவு போலீசாரும் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது திருவல்லிக்கேணி பகுதியில் ஏராளமான வெளிநாட்டு கரன்சிகளையும், புகைப்படங்களையும் வைத்திருந்த நபரை கைது செய்தனர்.
பாகிஸ்தான் ஏஜென்ட்
விசாரணையில் அவனது பெயர் ஜாகீர் ஹூசைன் வயது 37 என்பதும்,. இலங்கையில் தங்கி, பாகிஸ்தான் உளவு அமைப்பிற்கு ஆதரவான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
தாக்குதலுக்குத் திட்டம்
போலி பாஸ்போர்ட் மூலம் சென்னை நகருக்குள் மேலும் இருவரை ஊடுருவ வைக்க முயற்சி மேற்கொண்ட அவன், பெங்களூருவில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தாக விசாரணையில் தெரிவித்துள்ளான். அவனை கைது செய்த போலீசார், ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பாக்.தூதர் உதவி
இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரின் உதவியினாலேயே சென்னை வந்ததாக அந்த உளவாளி தெரிவித்துள்ளான். இலங்கையில் இருந்து சுற்றுலா விசாவில் சென்னை வந்ததாகவும் அவன் கூறியுள்ளான்.
ஆவணங்கள் பறிமுதல்
ஜாகீர் ஹூசைனிடம் இருந்து, முக்கிய ஆவணங்கள் மற்றும் போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கியூபிரிவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அவனிடம் இருந்து அமெரிக்க துணை தூதரகம் உள்ளிட்ட முக்கிய புகைப்படங்களையும், வெளிநாட்டு கரன்சிகளையும் கைப்பற்றினர்.
சிமி அமைப்புடன் தொடர்பு
பயங்கரவாத அமைப்புகள் சட்ட விரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ், ஜாகீர் ஹூசேனை கைது செய்துள்ளதாகவும், அவர் சிமி அமைப்புடன் தொடர்பு கொண்டுள்ளதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.
ரகசிய திட்டம்
பாகிஸ்தான் உளவாளி சென்னை வந்ததன் நோக்கம்? அவரின் கூட்டாளிகள் யார் ? அவர்களின் திட்டம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் கியூ பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஞாயிறன்று கைது
இதனிடையே நேற்றுதான் பாகிஸ்தான் உளவாளி கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் ஞாயிறன்றே அவர் கைது செய்யப்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications