வீட்டிலிருந்தே வேலை...கை நிறைய சம்பாத்தியம்... தமிழகத்தில் அதிகரிக்கும் எண்ணிக்கை!
சென்னை: ஆதிமூலம் என்பவரை உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான்.
ஆனால், அவர் ஒரு சிறிய பழைய பேப்பர் கடையின் மூலமாக தன்னுடைய குடும்பத்தையே நடத்தி வருகின்றார்.
இந்த வருமானத்தின் மூலமாக தன்னுடைய கடையையே சொந்தமாக்கி விட்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
சுயதொழில் மந்திரம்:
ஆதிமூலம் தனி ஆள் அல்ல. நாட்டையே தூக்கி நிறுத்தும் சுயதொழில் முனைவோர் கூட்டணியில் அவரும் ஒருவர். இவர் மட்டுமல்ல தமிழ்நாட்டில் இதுபோன்று வீட்டிலிருந்தே நாட்டின் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தும் உழைப்பாளிகள் அதிகம்.
புள்ளிவிவர ஆய்வுக் கழகம்:
அவர்களின் விகிதாச்சாரம் தமிழ்நாட்டில் 48.36%. இந்திய நாட்டில் 38.39% என்று இந்திய புள்ளிவிவர ஆய்வுக் கழகம் பொருளாதார கணக்கெடுப்பை வெளியிட்டுள்ளது.
நாட்டின் முதுகெலும்பு:
"தமிழ் நாடு முழுவதும் வீட்டிலிருந்தும், சிறிய கடைகளில் இருந்தும் வேலை பார்ப்பவர்கள் மிகவும் அதிகம். இதுபோன்ற கிளை வேலைகள் பெரிய பெரிய நிறுவனங்களில் இருந்துதான் கிடைக்கின்றன. அவற்றின் முதுகெலும்புகளும் இவைதான் " என்று பொருளாதார நிபுணர் ராமன் மகாதேவன் தெரிவித்துள்ளார்.
வாழ்வாதரம் தரும் வேலை:
வீட்டிலிருந்தே மாநிலம் முழுவதும் பலர் தங்களுடைய வாழ்வாதரத்திற்கான தொகையை இதுபோன்ற வேலைகளின் மூலமாக பெற்று விடுகின்றனர்.
நாடு முழுதும் கோடி மக்கள்:
நாடு முழுவதும் 58.47 கோடி மக்கள் இதுபோன்ற வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். உத்தர பிரதேசத்தில் 67 லட்சம், மகாராஷ்டிரா 61.25 லட்சம்.
அதிகரித்துள்ள சதவீதம்:
தமிழ் நாட்டில் 50.52 லட்சம் மக்கள் இதுபோன்ற வீட்டிலிருந்தே செய்யும் தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். தற்போது நாடு முழுவதும் இதன் சதவீதம் 41.37 ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.