கமல் தமிழில் தமிழிசை போட்ட திடீர் ட்வீட்!
சசிகுமார் உறவினர் அசோக்குமார் மரணத்தில் ஏன் குரல் கொடுக்கவில்லை என கமலுக்கு தமிழ்நாடு பாஜக கட்சி தலைவர் தமிழிசை சவுந்தர் ராஜன் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
சென்னை:சசிகுமார் உறவினர் அசோக்குமார் மரணத்தில் ஏன் குரல் கொடுக்கவில்லை என கமலுக்கு தமிழ்நாடு பாஜக கட்சி தலைவர் தமிழிசை சவுந்தர் ராஜன் கேள்வி எழுப்பி இருக்கிறார். நடிகர் கமல்ஹாசனை மறைமுகமாக சாடி திடீர் அரசியல்வாதிகள் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
இயக்குநர் சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் சென்னையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட இவர் தன் தற்கொலை குறித்து கடிதம் எழுதி வைத்துள்ளார்.

இந்த நிலையில் இவரது மரணம் குறித்து கருத்து தெரிவிக்காமல் இருக்கும் கமல்ஹாசனிடம் தமிழ்நாடு பாஜக கட்சி தலைவர் தமிழிசை சவுந்தர் ராஜன் சில கேள்விகளை கேட்டு இருக்கிறார். அதில் கமல்ஹாசன் குறித்து நேரிடியாக குறிப்பிடாமல் மறைமுகமாக பேசி இருக்கிறார்.
தன்துறைசார்ந்ததுக்கம்தன்னைஏற்றிவிட்டதுறையில் பெரும்துயரம்பகிர்ந்து கொள்ளா கொடூரஅமைதி திடீர் டுவிட்டர்அரசியல்வாதிகள் எங்கே?தேடத்தான்வேண்டும்!
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiBJP) November 22, 2017
அதில் ''தன் துறை சார்ந்த துக்கம் குறித்து குரல் கொடுக்கவில்லை. தன்னை ஏற்றிவிட்ட துறையில் பெரும் துயரம் நிகழ்ந்து இருக்கிறது. ஆனாலும் கொடூர அமைதி. திடீர் டுவிட்டர் அரசியல்வாதிகள் எங்கே? தேடத்தான் வேண்டும்! '' என்று கோவமாக குறிப்பிட்டு இருக்கிறார்.












Click it and Unblock the Notifications