அடி தூள்! ரேஷன் கடைகளில்.. தரமான பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய ஜெ ராதாகிருஷ்ணன் அதிரடி உத்தரவு
செங்கல்பட்டு: ரேஷன் கடைகளில் தரமற்ற பொருட்கள் வழங்கப்படுவதைத் தடுக்க அரசு பிறப்பித்துள்ள முக்கிய உத்தரவு குறித்து கூட்டுறவுத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாதமும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிசி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த ரேஷன் அரிசிகளுக்குக் கடத்தப்படுவதாக சில காலமாகவே புகார்கள் உள்ளன.
இதைத் தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கை எடுத்த வருகிறது. இருப்பினும், இதற்குப் பெரியளவில் பலன் கிடைப்பதில்லை.. ரேஷன் அரிசி கடத்தல் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.

ரேஷன் கடைகள்
அதேபோல ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்களும் சிறப்பாக வழங்கப்படுவதில்லை என்ற புகாரும் இருந்து வருகிறது. இதற்கிடையே செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள தச்சூர் கிராமத்தில் தனியார் தொண்டு நிறுவனங்கள் இணைந்து விவசாயிகளுக்கு நெற்களம் அமைத்து விவசாயிகளுக்கு இலவச தார்பாய்களை வழங்கும் விழா நடைபெற்றது.

ராதாகிருஷ்ணன்
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கூட்டுறவுத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். விவசாயிகளுக்காக அமைக்கப்பட்ட நெற்களத்தை தொடங்கி வைத்து அவர் 50க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச தார்பாய்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழக முதல்வர் ஸ்டாலின் ரேஷன் கடைகளில் கிடைக்கும் பொருட்கள் தரமுடன் இருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

தரமான பொருட்கள்
அதன் படி அனைத்து ரேஷன் கடைகளிலும் தரமான பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்துள்ளோம். இதற்காகத் தொடர்ச்சியாக ஆய்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது. இப்போது மாநிலத்தில் அனைத்து பகுதிகளிலும் உள்ள ரேஷன் கடைகளிலும் தரமான பொருட்கள் வழங்கப்படுகிறது. இதை நாங்கள் உறுதி செய்துள்ளோம்... ஒரு சில கடைகளில் மட்டுமே தரமற்ற பொருட்கள் வழங்கப்படுவதாகப் புகார் உள்ளது.

புதிய உத்தரவு
அதையும் தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். குறிப்பாக ரேஷன் கடைகளுக்கு இரவு நேரங்களில் வாகனங்களில் பொருட்களைக் கொண்டு வர தடை விதித்துள்ளோம். பகல் நேரத்தில் மட்டுமே பொருட்களைக் கொண்டு வர உத்தரவிட்டுள்ளோம். அப்போது தான் தரமான பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய முடியும்.. தரமற்ற பொருட்கள் இருந்தால் அதை உடனடியாக மாற்றி மாற்று ஏற்பாடு செய்து தரமுடியும்" என்று அவர் தெரிவித்தார்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications