அடி தூள்! ரேஷன் கடைகளில்.. தரமான பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய ஜெ ராதாகிருஷ்ணன் அதிரடி உத்தரவு
செங்கல்பட்டு: ரேஷன் கடைகளில் தரமற்ற பொருட்கள் வழங்கப்படுவதைத் தடுக்க அரசு பிறப்பித்துள்ள முக்கிய உத்தரவு குறித்து கூட்டுறவுத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாதமும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிசி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த ரேஷன் அரிசிகளுக்குக் கடத்தப்படுவதாக சில காலமாகவே புகார்கள் உள்ளன.
இதைத் தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கை எடுத்த வருகிறது. இருப்பினும், இதற்குப் பெரியளவில் பலன் கிடைப்பதில்லை.. ரேஷன் அரிசி கடத்தல் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.

ரேஷன் கடைகள்
அதேபோல ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்களும் சிறப்பாக வழங்கப்படுவதில்லை என்ற புகாரும் இருந்து வருகிறது. இதற்கிடையே செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள தச்சூர் கிராமத்தில் தனியார் தொண்டு நிறுவனங்கள் இணைந்து விவசாயிகளுக்கு நெற்களம் அமைத்து விவசாயிகளுக்கு இலவச தார்பாய்களை வழங்கும் விழா நடைபெற்றது.

ராதாகிருஷ்ணன்
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கூட்டுறவுத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். விவசாயிகளுக்காக அமைக்கப்பட்ட நெற்களத்தை தொடங்கி வைத்து அவர் 50க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச தார்பாய்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழக முதல்வர் ஸ்டாலின் ரேஷன் கடைகளில் கிடைக்கும் பொருட்கள் தரமுடன் இருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

தரமான பொருட்கள்
அதன் படி அனைத்து ரேஷன் கடைகளிலும் தரமான பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்துள்ளோம். இதற்காகத் தொடர்ச்சியாக ஆய்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது. இப்போது மாநிலத்தில் அனைத்து பகுதிகளிலும் உள்ள ரேஷன் கடைகளிலும் தரமான பொருட்கள் வழங்கப்படுகிறது. இதை நாங்கள் உறுதி செய்துள்ளோம்... ஒரு சில கடைகளில் மட்டுமே தரமற்ற பொருட்கள் வழங்கப்படுவதாகப் புகார் உள்ளது.

புதிய உத்தரவு
அதையும் தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். குறிப்பாக ரேஷன் கடைகளுக்கு இரவு நேரங்களில் வாகனங்களில் பொருட்களைக் கொண்டு வர தடை விதித்துள்ளோம். பகல் நேரத்தில் மட்டுமே பொருட்களைக் கொண்டு வர உத்தரவிட்டுள்ளோம். அப்போது தான் தரமான பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய முடியும்.. தரமற்ற பொருட்கள் இருந்தால் அதை உடனடியாக மாற்றி மாற்று ஏற்பாடு செய்து தரமுடியும்" என்று அவர் தெரிவித்தார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications