தமிழகத்தில் அதிகரிக்கும் கூலிப்படையினர் அட்டகாசம்.. சுட்டுத்தள்ள போலீசாருக்கு ரகசிய உத்தரவு?
சென்னை: கூலிப்படையினர் அட்டகாசம் அதிகரித்துள்ளதால், அவர்களை சுட்டு வீழ்த்த அரசு ரகசிய உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த அதிமுக ஆட்சியின்போது, உடுமலைப்பேட்டையில் மக்கள் கண் எதிரில் தலித் வாலிபர் சங்கர் கூலிப்படையால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் இரு பகுதிகளில் வழக்கறிஞர்கள் இருவர் நடு ரோட்டில் வெட்டி கொலை செய்யப்பட்டனர். ஒசூரில், வழிப்பறி கொள்ளையர்களால், போலீஸ் கான்ஸ்டபிள் குத்தி கொலை செய்யப்பட்டார்.

பெண் படுகொலை
மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், நேற்று முன்தினம் காலையில், இன்போசிஸ் ஊழியர் சுவாதி அரிவாளால் கொடூரமாக வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

கோவையில் கொலை
இது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த திமுக ஆட்சியின்போது கோவையில் குழந்தைகளை பணம் கேட்டு கடத்தி சென்ற கும்பல் 2 குழந்தைகளை ஈவு இரக்கமின்றி கொன்றது. அப்போது மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது.

என்கவுண்டர்
கோவையில் ஒட்டுமொத்த மக்களும் தென் எழுச்சியடைந்து கடையடைப்பு நடத்தி தங்களின் ஆக்ரோஷத்தை அரசுக்கு எதிராக வெளிப்படுத்தினர். இதையடுத்து குழந்தைகளை கொன்றவனை, போலீசார் சுட்டு பொசுக்கினர். தங்களை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றபோது, குற்றவாளி கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

சட்டம்-ஒழுங்கு
உண்மையோ, இல்லையோ ஆனால், சட்டம்-ஒழுங்கை பேணி காப்பவர் என்று ஜெயலலிதா மீது ஒரு இமேஜ் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இமேஜை சுமந்து கொண்டிருக்கும் ஜெயலலிதா இப்போதுள்ள கொந்தளிப்பை அடக்க, கூலிப்படையினரை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிரடி உத்தரவு
உள்துறை செயலர், டி.ஜி.பி., அனைத்து மாநகர போலீஸ் கமிஷனர்கள் மற்றும் உளவுத்துறை ஐ.ஜி. உள்ளிட்ட போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு, ஜெயலலிதா சில அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்.

வேட்டு சத்தம் வெளியேவரும்
இதுகுறித்து காவல்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, அதிக தகவல்களை வெளிப்படுத்த தயங்கினர். இருப்பினும், ஒசூர், சென்னை பக்கம் விரைவில், வேட்டு சத்தம் கேட்கலாம் என்று சிலர் கிசுகிசுத்தனர். மக்கள் கொந்தளிப்பில் இருக்கும்போது மனித உரிமை ஆர்வலர்கள் சத்தம் எடுபடாது என்பதால், துப்பாக்கியை துடைத்து ரெடி செய்து வருகிறார்கள் போலீசார் என்கிறார்கள், விவரம் அறிந்தோர்.
-
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications